» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

சக்தி வித்யாலயா பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம்

வெள்ளி 28, ஜூன் 2024 12:49:44 PM (IST)



தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் இலவச  கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. 

தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி இளஞ்செஞ்சிலுவை சங்கம், டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் இலவச  கண் பரிசோதனை முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. முகாமினை பள்ளியின் தாளாளரும் முதல்வருமான ஆ.ஜெயா சண்முகம் தொடங்கி வைத்தார். மூத்த கண் மருத்துவர் மாரீஸ்வரி, முகாம் அமைப்பாளராகள் அழகுலிங்கம், சப்பானிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்தனர்.

முகாமில் 3-ம் மைல், சங்கர் காலனி, திரு.வி.க நகர், ஆசிரியர் காலனி, இந்திரா நகர், பி&டி காலனி, ஆகிய பகுதிகளிலிருந்து பொதுமக்களும், பெரியோர்களும், பெற்றோர்கள், மற்றும் மாணவ மாணவிகளும் இம்முகாமில் பயனடைந்தனர். முகாம் நிறைவில் பள்ளியின் துணை முதல்வர் பிரியங்கா அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மேலாளர் மற்றும் பணியாளர்களுக்கும் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை இளஞ்செஞ்சிலுவை சங்க கவுன்சிலர்கள் நந்தினி, கிருபா ஆகியோர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory