தூத்துக்குடியின் வரலாறு (1 of 10)

முதல் வரலாற்றுக் - குறிப்பு

  1. தூத்துக்குடி முதல் வரலாற்றுக் குறிப்பு கி.மு.123ல் தாலாமி என்ற கிரேக்க பயணி எழுதிய நூலில் சோதிக்குரை என்ற முத்துக்குளித்துரை நகரம் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடும் சோதிக்குரை நகரம்தான் தூத்துக்குடி என்று வரலாற்று அறிஞர்கள் இனம் கண்டுள்ளனர்.

  2. கிபி.80ல் ஒரு அறிமுகமற்ற அடுக்கியந்திரியின், கிரேக்கர்கள் எரித்திரிரேயன் கடல் பெரிப்லஸ், என்ற நூலில் தூத்துக்குடி என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

  3. ஜேம்ஸ் கர்னல் மன்னார் வளைகுடாவில் முத்துக்குளித்துரையை பற்றி சென்னை அரசாங்கத்திற்கு தான் சமர்ப்பித்த அறிக்கையில் தோத்துக்குரையாக மாறி இறுதியில் தூத்துக்குடி என்ற பெயர் பிறந்து இருக்கிறது என்று கூறியுள்ளார்.

  4. தூத்துக்குடி என்ற பெயர் ஐரோப்பியர்களின் உச்சரிப்பில் மாற்றம் பெற்று டூட்டிகொரின் ("Tuticorin") என்று வந்துள்ளதென்று கால்டுவெல் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

பிற்கால பாண்டியர்கள் காலம் ஆட்சிவரை

இந்தியாவில் ஒருசில நகரங்களில்தான் தொடர்ச்சியாக கவர்ச்சியான வரலாறு உள்ளது. பண்டைய காலத்தில் வணிக மையங்களாகவும், நாகரீகத்தின் தொட்டில்களாகவும் விளங்கிய துறைமுகங்களெல்லாம் நலிவுற்று வீழ்ச்சியடைந்து விட்டது. அதையும் மீறி வெற்றிநடை போட்டு வளர்ச்சி பாதையில் வளர்ந்துவரும் நகரம் தூத்துக்குடியாகும். அதற்கு காரணமாக அமைந்திருப்பது தூத்துக்குடி துறைமுகமாகும்.
 
தூத்துக்குடி வரலாற்றில் நமது பாண்டியர்களின் வரலாறு, முகமதியர்களின் படையெடுப்பின் பாதிப்பு, நாயக்கர்களின் ஆட்சி, காலணி ஆதிக்கத்தின் அன்னிய நாடுகளின் ஆக்கிரமிப்பு போட்டிகள், ஆங்கிலேயர் ஆட்சி, சுதந்திரபோராட்டம், நவீன கால அபிவிருத்தி திட்டங்கள் பிரதிபலிப்பை எல்லாம் காணலாம்.

கிபி 7வது நூற்றாண்டு முதல் 9வது நூற்றாண்டு வரை தூத்துக்குடி பாண்டிய மன்னர்கள் ஆட்சியிலிருந்தது. கிபி 10ம் நூற்றாண்டு முதல் 12வது நூற்றாண்டு வரை சோழ மன்னர்கள் ஆட்சியில் இருந்தது. கிபி 1026ல் இலங்கை மேல் படையெடுத்த சோழ மன்னன் தூத்துக்குடியிலிருந்துதான் படையெடுத்திருக்க வேண்டும் என வரலாற்றுச் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.

இக்கால கட்டத்தில், நீண்ட காலமாக தூத்துக்குடி கடல் வாணிபத்திலும், முத்துக்குளிப்பதிலும் ஒரு மைய நகரமாய் விளங்கியிருக்கிறது. இதற்கு முன்பு கொற்கைதான். ஒரு கடல் துறைமுகமாக அமைந்து அங்குதான் அரேபிய வியாபாரிகள் தங்கள் குதிரை வியாபாரத்தை தங்கள் ஏஜெண்டுகள் மூலம் நடத்தி வந்திருந்தனர். தாமிரபரணி நதியின் முகத்துவாரத்தில் கொற்கை இருந்ததால், மணல்மேடுகள் விளைவாக கொற்கையின் முக்கியத்துவம் குறைந்து அதற்கு பதில் காயல் என்னும் துறைமுகம் தோன்றியது.

கொற்கைக்கு நேர்ந்த கதியே காயலுக்கும் நேர்ந்தது. இதன் விளைவாகவே கிபி1400ல் தூத்துக்குடி ஒரு துறைமுக நகரமாக மிளிர துவங்கியது. அங்கே சகல பாதுகாப்பும் உள்ள ஒரு இயற்கை துறைமுகம் இருந்ததால் கப்பல்கள் பயமின்றி அங்கு நங்கூரம் போட முடிந்தது எனவே தூத்துக்குடி கடல் வணிகத்திற்கும், துறைமுக வசதிக்கும் சிறப்பு பெற்றது இயல்பே.


Favorite tags



Thoothukudi Business Directory