» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

சாத்தான்குளம் அரசு கல்லூரியில மாணவியர் பேரவை தொடக்க விழா

சனி 21, செப்டம்பர் 2024 10:41:54 AM (IST)



சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவியர் பேரவைத் தொடக்க விழா நடைபெற்றது.

வணிகவியல் துறைப் பேராசிரியை மரிய செல்வி ஜெயா வரவேற்றார். கல்லூரி பொறுப்பு முதல்வர் ஜமுனா ராணி தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியினை ஆங்கிலத்துறை பேராசிரியை ஆனந்தி, தமிழ்த்துறை பேராசிரியை உமாபாரதி ஆகியோர் தொகுத்து வழங்கினர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சின்னத்தாய்,, மாணவியர் பேரவை உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

இதில் மாணவர் பேரவைத் தலைவராக வணிகவியல் துறை மாணவி ஜீவிகா, துணைத் தலைவியாக கணினி அறிவியல் துறை மாணவி ஜெயப்பிரியா, செயலாளராக தமிழ்த்துறை மாணவி அபிநயா, இணைச் செயலாளராக வணிக நிர்வாகவியல் துறை மாணவி பர்வதம் மற்றும் ஆங்கிலத்துறை மாணவி பேச்சியம்மாள் கௌசல்யா, பொருளாளராக கணிதவியல் துறை மாணவி இந்துமதி பதவியேற்றனர். 

விழாவில் சாத்தான்குளம் கல்வி கழகத் தலைவர் ஜோசப், துணைத் தலைவர் லெட்சுமி நாராயணன், செயலர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வணிகவியல் துறை மாணவி ஜீவிகா நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை கல்லூரி பேரவைப் பேராசிரியர்கள் கீதா, கோகிலா, வளர்மதி ஆகியோர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory