» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம்!
வியாழன் 20, பிப்ரவரி 2025 5:51:03 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் "பூமி இழந்திடேல்” என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியின் அக தர நிர்ணயக் குழு மற்றும் சுற்றுச் சூழல் குழு இணைந்து இளங்கல்வியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கு "பூமி இழந்திடேல்” என்ற தலைப்பில் சிறப்புரை நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் த.கனகராஜ் வரவேற்றுப் பேசினார்.
பேராசிரியர் சு.பிரேம லதா சிறப்புரையாளர் கோவை க.சதாசிவம், சுற்றுச்சூழல் ஆர்வலர், எழுத்தாளர், கதைசொல்லி ஆவணப்பட இயக்குநர் மற்றும் பேச்சாளர் அவர்களை அறிமுகம் செய்தார். சிறப்புரையாளர் தனது உரையில் விலங்குகள், பறவைகள் மற்றும் மனிதர்கள் உயிர்வாழ ஆதாரமாக இருக்கும் பூமி மற்றும் தண்ணீரின் முக்கியத்துவத்தை தகுந்த உதாரணங்கள் மற்றும் கதைகள் மூலமாக விளக்கி சிறப்புரையாற்றினார்.
பொருளறிவியல் உதவிப் பேராசிரியர் சே.குரு வாசுகி நன்றியுரை கூறினார். முதலாமாண்டு மாணவ ஆசிரியர்கள் ச.மதுமிதா மற்றும் மா.கவிதா ஆகியோர் விழா நிகழ்வுகளை பேராசிரியர்களுடன் இணைந்து ஒன்றிணைத்தனர். விழாவினை தமிழ் மாணவ ஆசிரியர் எ.பெபினா மற்றும் அங்கிலத்துறை மாணவ ஆசிரியர் அ.தெபோரால் ஆகியோர் தொகுத்து வழங்கினர். விழாவில் 85 மாணவ ஆசிரியர்கள் மற்றும் 11 பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்.எம்.எம்.எஸ். தகுதித் தேர்வு: புனித அன்னாள் பள்ளி மாணவர்கள் சாதனை!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 10:16:44 AM (IST)

தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றி: மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா
புதன் 16, ஏப்ரல் 2025 11:03:04 AM (IST)

கோவில்பட்டி அரசு பள்ளியில் நிழல் இல்லா நாள் செயல் விளக்கபயிற்சி
திங்கள் 7, ஏப்ரல் 2025 4:27:22 PM (IST)

தமிழ் மன்றத் தேர்வில் வெற்றி : மர்காஷிஸ் மாணவர்களுக்கு பாராட்டு விழா
வியாழன் 20, மார்ச் 2025 8:08:57 AM (IST)

தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரி சார்பில் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சனி 8, மார்ச் 2025 5:22:04 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் அறிவியல் மன்றவிழா : மாணவர்கள் அசத்தல்!
சனி 8, மார்ச் 2025 4:43:30 PM (IST)
