» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம்!
வியாழன் 20, பிப்ரவரி 2025 5:51:03 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் "பூமி இழந்திடேல்” என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியின் அக தர நிர்ணயக் குழு மற்றும் சுற்றுச் சூழல் குழு இணைந்து இளங்கல்வியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கு "பூமி இழந்திடேல்” என்ற தலைப்பில் சிறப்புரை நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் த.கனகராஜ் வரவேற்றுப் பேசினார்.
பேராசிரியர் சு.பிரேம லதா சிறப்புரையாளர் கோவை க.சதாசிவம், சுற்றுச்சூழல் ஆர்வலர், எழுத்தாளர், கதைசொல்லி ஆவணப்பட இயக்குநர் மற்றும் பேச்சாளர் அவர்களை அறிமுகம் செய்தார். சிறப்புரையாளர் தனது உரையில் விலங்குகள், பறவைகள் மற்றும் மனிதர்கள் உயிர்வாழ ஆதாரமாக இருக்கும் பூமி மற்றும் தண்ணீரின் முக்கியத்துவத்தை தகுந்த உதாரணங்கள் மற்றும் கதைகள் மூலமாக விளக்கி சிறப்புரையாற்றினார்.
பொருளறிவியல் உதவிப் பேராசிரியர் சே.குரு வாசுகி நன்றியுரை கூறினார். முதலாமாண்டு மாணவ ஆசிரியர்கள் ச.மதுமிதா மற்றும் மா.கவிதா ஆகியோர் விழா நிகழ்வுகளை பேராசிரியர்களுடன் இணைந்து ஒன்றிணைத்தனர். விழாவினை தமிழ் மாணவ ஆசிரியர் எ.பெபினா மற்றும் அங்கிலத்துறை மாணவ ஆசிரியர் அ.தெபோரால் ஆகியோர் தொகுத்து வழங்கினர். விழாவில் 85 மாணவ ஆசிரியர்கள் மற்றும் 11 பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வுப் பேரணி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:24:51 PM (IST)

பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கோவில்பட்டி புத்தகத் திருவிழாவில் பாராட்டு!
சனி 23, மே 2026 3:05:55 PM (IST)

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்: ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 21, மே 2026 11:43:18 AM (IST)

பத்தாம் வகுப்பு தேர்வில் கோவில்பட்டி பள்ளி 100% தேர்ச்சி!
வியாழன் 21, மே 2026 11:02:36 AM (IST)

10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 7-இல் துவக்கம் : மே 26 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 21, மே 2026 8:46:56 AM (IST)

10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில்: தூத்துக்குடி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளி 100% தேர்ச்சி!
புதன் 20, மே 2026 7:57:09 PM (IST)

