» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளியில் தேசிய நூலக வார விழா நடந்தது.
நாடு முழுவதும் பொதுமக்களிடம் குறைந்த செலவில் நிறைந்த படிப்பினை தரும் பொது நூலகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேசிய நூலக வார விழா நவம்பர்14முதல் 21ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. எட்டையாபுரம் தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளியில் நடந்த தேசிய நூலக வாரவிழாவிற்கு தலைமையாசிரியர் லால்பகதூர் கென்னடி தலைமை வகித்தார்.
இதில் நூலக ஆர்வலர் ஆறுமுகசாமி கலந்துகொண்டு 25 மாணவர்களுக்கான நூலக உறுப்பினர் தொகையை செலுத்தினார். இதில் 25 மாணவர்கள் எட்டயபுரம் அரசு பொது நூலகத்தில் உறுப்பினராக தங்களை இணைத்துக் கொண்டனர். அரசு கிளை நூலகர் முத்து இருளப்பன் கலந்துகொண்டு நூலக விதிகள் மற்றும் வசதிகள் குறித்து பேசினார். இதில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)

நாட்டார்குளம் பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் தொடர் பயிற்சி வகுப்பு பயிலரங்கம்
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:50:43 PM (IST)

குழந்தைகள் அறிவியல் மாநாடு: ஆட்சியர் துவக்கி வைத்தார்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:48:06 PM (IST)

கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா
புதன் 15, அக்டோபர் 2025 5:15:51 PM (IST)


