» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளியில் தேசிய நூலக வார விழா நடந்தது.
நாடு முழுவதும் பொதுமக்களிடம் குறைந்த செலவில் நிறைந்த படிப்பினை தரும் பொது நூலகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேசிய நூலக வார விழா நவம்பர்14முதல் 21ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. எட்டையாபுரம் தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளியில் நடந்த தேசிய நூலக வாரவிழாவிற்கு தலைமையாசிரியர் லால்பகதூர் கென்னடி தலைமை வகித்தார்.
இதில் நூலக ஆர்வலர் ஆறுமுகசாமி கலந்துகொண்டு 25 மாணவர்களுக்கான நூலக உறுப்பினர் தொகையை செலுத்தினார். இதில் 25 மாணவர்கள் எட்டயபுரம் அரசு பொது நூலகத்தில் உறுப்பினராக தங்களை இணைத்துக் கொண்டனர். அரசு கிளை நூலகர் முத்து இருளப்பன் கலந்துகொண்டு நூலக விதிகள் மற்றும் வசதிகள் குறித்து பேசினார். இதில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வுப் பேரணி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:24:51 PM (IST)

பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கோவில்பட்டி புத்தகத் திருவிழாவில் பாராட்டு!
சனி 23, மே 2026 3:05:55 PM (IST)

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்: ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 21, மே 2026 11:43:18 AM (IST)

பத்தாம் வகுப்பு தேர்வில் கோவில்பட்டி பள்ளி 100% தேர்ச்சி!
வியாழன் 21, மே 2026 11:02:36 AM (IST)

10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 7-இல் துவக்கம் : மே 26 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 21, மே 2026 8:46:56 AM (IST)

10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில்: தூத்துக்குடி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளி 100% தேர்ச்சி!
புதன் 20, மே 2026 7:57:09 PM (IST)

