» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம் கல்லூரியில் தேசிய வாசிப்பு வார விழா நிகழ்ச்சி!

வியாழன் 25, ஜூன் 2026 8:35:01 AM (IST)



கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம் கல்லூரியில், நூலகத் துறையின் வாசகர் மன்றம் சார்பில் தேசிய வாசிப்பு வார விழா சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கேரள மாநிலத்தின் கல்வியாளர் மற்றும் நூலக இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் பி. என். பணிக்கர் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 19 முதல் ஜூன் 25 வரை தேசிய வாசிப்பு வாரமாக அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, எஸ்.எஸ். துரைச்சாமி  நாடார் மாரியம்மாள் கல்லூரி நூலகத் துறையின் வாசகர் மன்றம் சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். முதல்வர் முனைவர் ஆர். செல்வராஜ் வாழ்த்துரை வழங்கினார். தமிழ் துறை பேராசிரியர் இராஜு சிறப்புரையாற்றி, வாசிப்பின் அவசியம் மற்றும் அதன் பயன்கள் குறித்து எடுத்துரைத்தார்.

தொடர்ந்து, வணிகவியல் துறை மாணவி ஆனந்தி வாசிப்பு உறுதிமொழி ஏற்கச் செய்தார். மேலும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் புத்தக விமர்சனங்களை வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தனர். முன்னதாக வணிகவியல் துறை மாணவி காயத்ரி வரவேற்புரை வழங்கினார். நிறைவாக நூலகத் துறைத் தலைவர் செண்பகாதேவி நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நூலகத் துறைத் தலைவர் பா. செண்பகாதேவி, வாசகர் மன்ற ஒருங்கிணைப்பாளர்களான ஆங்கிலத் துறை பேராசிரியர் திவ்யா 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory