» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

வியாழன் 25, ஜூன் 2026 3:56:20 PM (IST)



நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் சர்வதேச போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, போதைப்பொருட்களின் தீமைகளை விளக்கும் விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

உலகளவில் ஆண்டுதோறும் ஜூன் 26-ஆம் தேதி சர்வதேச போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் உள்ள மர்காஷிஸ் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இவ்விழாவிற்குக் கல்லூரி முதல்வர் பென்னிசன் தலைமை தாங்கி, போதைப்பொருள் ஒழிப்பின் அவசியம் குறித்துப் பேசி அனைவரையும் வரவேற்றார். இதனைத் தொடர்ந்து பேராசிரியர் மோசஸ் விழிப்புணர்வு வாழ்த்துரை வழங்கினார். நிகழ்வில், கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் ராஜசிங் ரோக்லண்ட் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வுக்கான முக்கிய உறுதிமொழியை வாசித்தார். 

அதனை ஏற்று மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்கள் அனைவரும் போதைப்பொருள் இல்லாத ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவோம் என உறுதியேற்றுக் கொண்டனர். இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கான ஒட்டுமொத்த ஏற்பாடுகளையும் கல்லூரிச் செயலர் ராஜன், முதல்வர் பென்னிசன், ஆங்கிலத் துறை பேராசிரியரும் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஷெர்லின் ராஜா, பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் இணைந்து செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory