» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தமிழ் மன்றத் தேர்வில் வெற்றி : மர்காஷிஸ் மாணவர்களுக்கு பாராட்டு விழா
வியாழன் 20, மார்ச் 2025 8:08:57 AM (IST)

தூத்துக்குடி மாவட்ட அளவிலான தமிழ் மன்றத் தேர்வில் வெற்றி பெற்ற மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட தமிழக தமிழாசிரியர் கழகம் சார்பில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் மன்றத் தேர்வு மாவட்ட அளவில் நடத்தப்பட்டது. தேர்வில், மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர்.
அதில் மாணவர் பாலச்சந்திரன் முதலிடத்தையும், மாணவர்கள் மகாராஜா, அகஸ்டின் மற்றும் ஆதிநாராயணன் ஆகியோர் இரண்டாமிடத்தையும் பெற்று சிறப்பு சேர்த்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. தலைமையாசிரியர் குணசீலராஜ் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் திருக்குறள் புத்தகங்களை வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில், உதவி தலைமையாசிரியர் சார்லஸ் திரவியம், தமிழ் ஆசிரியர்கள் ஆபிரகாம் இமானுவேல், எட்வின், வின்ஸ்டன் ஜோஸ்வா, அம்புரோஸ் சுகிர்தராஜ், தமிழ் ஆசிரியைகள் செல்வம் மற்றும் ரூபி பொற்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் செய்திருந்தார்.வெற்றி பெற்ற மாணவர்களை பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரி சார்பில் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சனி 8, மார்ச் 2025 5:22:04 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் அறிவியல் மன்றவிழா : மாணவர்கள் அசத்தல்!
சனி 8, மார்ச் 2025 4:43:30 PM (IST)

தூத்துக்குடி திருச்சிலுவை ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா
ஞாயிறு 2, மார்ச் 2025 11:44:25 AM (IST)

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
வெள்ளி 21, பிப்ரவரி 2025 3:18:31 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம்!
வியாழன் 20, பிப்ரவரி 2025 5:51:03 PM (IST)

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: அழகர் பப்ளிக் பள்ளி அணி வெற்றி
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:08:36 PM (IST)
