» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தமிழ் மன்றத் தேர்வில் வெற்றி : மர்காஷிஸ் மாணவர்களுக்கு பாராட்டு விழா
வியாழன் 20, மார்ச் 2025 8:08:57 AM (IST)

தூத்துக்குடி மாவட்ட அளவிலான தமிழ் மன்றத் தேர்வில் வெற்றி பெற்ற மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட தமிழக தமிழாசிரியர் கழகம் சார்பில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் மன்றத் தேர்வு மாவட்ட அளவில் நடத்தப்பட்டது. தேர்வில், மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர்.
அதில் மாணவர் பாலச்சந்திரன் முதலிடத்தையும், மாணவர்கள் மகாராஜா, அகஸ்டின் மற்றும் ஆதிநாராயணன் ஆகியோர் இரண்டாமிடத்தையும் பெற்று சிறப்பு சேர்த்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. தலைமையாசிரியர் குணசீலராஜ் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் திருக்குறள் புத்தகங்களை வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில், உதவி தலைமையாசிரியர் சார்லஸ் திரவியம், தமிழ் ஆசிரியர்கள் ஆபிரகாம் இமானுவேல், எட்வின், வின்ஸ்டன் ஜோஸ்வா, அம்புரோஸ் சுகிர்தராஜ், தமிழ் ஆசிரியைகள் செல்வம் மற்றும் ரூபி பொற்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் செய்திருந்தார்.வெற்றி பெற்ற மாணவர்களை பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வுப் பேரணி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:24:51 PM (IST)

பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கோவில்பட்டி புத்தகத் திருவிழாவில் பாராட்டு!
சனி 23, மே 2026 3:05:55 PM (IST)

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்: ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 21, மே 2026 11:43:18 AM (IST)

பத்தாம் வகுப்பு தேர்வில் கோவில்பட்டி பள்ளி 100% தேர்ச்சி!
வியாழன் 21, மே 2026 11:02:36 AM (IST)

10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 7-இல் துவக்கம் : மே 26 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 21, மே 2026 8:46:56 AM (IST)

10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில்: தூத்துக்குடி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளி 100% தேர்ச்சி!
புதன் 20, மே 2026 7:57:09 PM (IST)

