» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மதர் தெரேசா பொறியியல் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு முகாம்!

புதன் 26, ஜூன் 2024 12:30:04 PM (IST)




தூத்துக்குடி  செயின்ட் மதர் தெரேசா பொறியியல் கல்லூரியில் தமிழக காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜாஸ்பர் ஞானச்சந்திரன் தலைமை தாங்கினார் சிறப்பு விருந்தினர்களாக புதுக்கோட்டை காவல் நிலையம் கண்காணிப்பாளர் வன சுந்தர் மற்றும் உதவி கண்காணிப்பாளர் ஞானராஜன் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பற்றி விலா வரியாக மாணவர்களுக்கு சில எடுத்துக்காட்டுகளை கூறி எடுத்துரைத்தனர். 

ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு, தாளாளர் பிரியதர்ஷினி அருண் பாபு, பொது மேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார் ஜான் கென்னடி இயக்குனர் மாணவர் சேர்க்கை, ரவிசங்கர் இயக்குனர் வேலை வாய்ப்பு, கல்லூரி இயக்குனர் ஜார்ஜ் கிளின்டன் ஆகியோர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு துறை தலைவர் தாமஸ், கவிதா மற்றும் பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி விக்னேஷ் செய்திருந்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory