» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தின விழா!

வெள்ளி 21, ஜூன் 2024 4:08:09 PM (IST)



நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தின விழா நடைபெற்றது. 

சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண் டும் சர்வதேச யோகா தினத்தினு டைய கருத்துப் பொருளாக "தனி மனிதருக்கும் யோகா சமுதாயத் திற்கும் யோகா" என்ற தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டுநடத்தப்பப்ட்ட யோகா சன நிகழ்ச்சிகளை பள்ளியின் தலைமையாசிரியர் குணசீலராஜ் துவக்கி வைத்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜேசன் சாமுவேல் மற்றும் தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வ சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி ஆசிரியர் தனபால் மாணவர்களுக்கு யோகாசனம் கற்றுக் கொடுத்தார். 

மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியின் பெரிய கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்களும் தேசிய மாணவர் படை மாணவர்களும் மற்றும் பிற வகுப்பு மாணவர்களும் திரளாக கலந்து கொண்டு யோகாசனம் செய்து காண்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ், உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் ஜெய்சன் பாபு ஆகியோர் செய்திருந்தனர். சர்வதேச யோகா தின விழாவில் கலந்து கொண்ட மாணவர்களை பள்ளியின் தாளாளர் சுதாகர், ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory