» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

சிறந்த வினாத்தாள் கட்டுக்கோப்பு மையம்: நாசரேத் மர்காஷிஸ் பள்ளிக்கு பாராட்டு!

வியாழன் 30, மே 2024 10:19:06 AM (IST)



சிறந்த வினாத்தாள் கட்டுக்கோப்புமையமாக செயல்பட்ட நாசரேத் மர்காஷிஸ் மேல் நிலைப் பள்ளிக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி பாராட்டு தெரிவித்தார்.

வினாத்தாள் தயாரித்த ஆசிரியர்கள், நீட் பயிற்சி கொடுத்த ஆசிரியர்கள், வினாத்தாள் கட்டுக் கோப்பு மைய பொறுப்பாளர்களு க்கு பாராட்டு விழா தூத்துக்குடி சுப் பையா வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தலைமை வகித்தார்.  மாவ ட்ட கல்வி அலுவலர் குருநாதன் முன்னிலை வகித்தார். 

நிகழ்ச்சி யில் கலந்து கொண்ட  தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதில் சிறந்த வினாத்தாள் கட்டுக்கோப்பு மையமாக செயல்பட்ட நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளிக்கு முதன்மை கல்வி அலுவலர் பரிசு வழங்கினார். 

மர்காஷிஸ்  மேல்நிலைப்பள்ளி தாளாளர் சுதாகர் மற்றும் தலைமை ஆசிரியர் கென்னடி வேதராஜ் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் சிறந்த வினாத்தாள் கட்டுக்கோப்பு மையத்திற்கான பரிசினை, நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் மற்றும் உடற்கல்வி இயக்குனர்  பெலின் பாஸ்கர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பரிசு பெற்ற ஆசிரியர்களை மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி  ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory