» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
டிசிடபிள்யூ நிறுவனத்தின் சார்பில் விவசாயிகள் சங்கத்திற்கு புதிய அலுவலகக் கட்டடம் திறப்பு விழா!
வியாழன் 4, ஜூன் 2026 8:30:19 PM (IST)

ஆத்தூரில், டிசிடபிள்யூ நிறுவனத்தின் சார்பில் ரூ.21.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள விவசாயிகள் சங்கத்தின் புதிய அலுவலகக் கட்டடம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் வட்டாரப் பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, டிசிடபிள்யூ நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதியிலிருந்து ரூ.21.50 லட்சம் செலவில் ஆத்தூர் குளம் கீழ்ப்பகுதி விவசாயிகள் சங்கத்திற்காக, புதிய அலுவலகக் கட்டடம் ஆத்தூர் பேருந்து நிலையம் அருகில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய கட்டடத்தின் திறப்பு விழா இன்று (ஜூன் 4) காலை நடைபெற்றது.விழாவில், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ முன்னிலையில், டிசிடபிள்யூ நிறுவனத்தின் மூத்த செயல் உதவித் தலைவர் ஜி. சீனிவாசன் புதிய அலுவலகக் கட்டடத்தைத் திறந்து வைத்தார்.

இவ்விழாவில், ஆத்தூர் கீழ்ப்பகுதி விவசாயிகள் சங்கத் தலைவர் செல்வம், செயலாளர் தட்சிணாமூர்த்தி, பொருளாளர் மாதவன், உபதலைவர் வாசிங்டன், உபசெயலாளர் வெள்ளைச்சாமி, மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும் பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை: ரூ.2.65 லட்சம் பறிமுதல்!
வியாழன் 4, ஜூன் 2026 8:46:08 PM (IST)

ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி : பயனாளிகளுக்கு உடனடி பட்டா வழங்கல்
வியாழன் 4, ஜூன் 2026 8:16:11 PM (IST)

திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர், உதவி ஆணையர் அதிரடி இடமாற்றம்: அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு!
வியாழன் 4, ஜூன் 2026 7:41:34 PM (IST)

ஏரல் ஜமாபந்தியில் 3 நாட்களில் 189 மனுக்கள் : 11 பேருக்கு பட்டாக்களை வழங்கினார் ஆட்சியர்!
வியாழன் 4, ஜூன் 2026 5:12:39 PM (IST)

கழிவுமீன் ஆலைகளை மூடக்கோரி 751-வது நாள் போராட்டம் : புதிய அரசு மீது மக்கள் நம்பிக்கை!
வியாழன் 4, ஜூன் 2026 4:54:32 PM (IST)

தமிழகத்தில் பெண்கள் பீதியில் உறைந்துள்ளனர்! – திருச்சி சம்பவத்திற்கு கனிமொழி எம்பி கண்டனம்!
வியாழன் 4, ஜூன் 2026 3:40:23 PM (IST)










