» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி : பயனாளிகளுக்கு உடனடி பட்டா வழங்கல்

வியாழன் 4, ஜூன் 2026 8:16:11 PM (IST)



ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் பயனாளிகளுக்கு இணையவழி இ-பட்டாக்கள் உடனடியாக வழங்கப்பட்டன. 

தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய் தீர்வாய கணக்குகள் முடிவு செய்யும் பணி (ஜமாபந்தி) அனைத்து வட்டங்களிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக, ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்விற்கு அல்லிகுளம் சிப்காட் நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரலிங்கம் ஜமாபந்தி அலுவலராக நியமிக்கப்பட்டுப் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று வருகிறார்.

ஓட்டப்பிடாரம் வட்டத்திற்கு உட்பட்ட கீழமங்கலம் வருவாய் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர், தாங்கள் முறைப்படி பத்திரப்பதிவு செய்த நிலத்திற்கு நீண்ட நாட்களாகப் பட்டா வழங்கப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டிருந்த விவகாரம் குறித்து ஜமாபந்தி அலுவலரான தனி மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்துத் முறையிட்டனர்.

பொதுமக்களின் இந்த நியாயமான கோரிக்கை மனுவை உடனடியாகப் பரிசீலனை செய்த தனி மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரலிங்கம், இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உரிய ஆவணங்களைச் சரிபார்க்கக் கறாரான அறிவுறுத்தல்களை வழங்கினார்.

மாவட்ட வருவாய் அலுவலரின் அறிவுறுத்தலின் பேரில், ஜமாபந்தியில் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் மீது வருவாய்த்துறை ஆவணங்கள் அனைத்தும் தங்கு தடையின்றி உடனடியாகச் சரிபார்க்கப்பட்டு, தேங்கியிருந்த நிலப் பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட 2 பயனாளிகளுக்குத் தங்களது நிலத்திற்கான புதிய இணையவழி இ-பட்டாக்கள் உடனடியாகத் தயார் செய்யப்பட்டு, இன்று அவர்கள் கரங்களில் முறைப்படி வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் சிப்காட் தனி வட்டாட்சியர் சந்திரன், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அய்யனார், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் இசக்கி ராஜா, மண்டலத் துணை வட்டாட்சியர் மரிய வியாகுல ஜெயா, வருவாய் ஆய்வாளர் நல்லதம்பி மற்றும் கீழமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் மாலா உள்ளிட்ட வருவாய்த்துறையின் அனைத்து நிலை அலுவலர்களும், கிராம உதவியாளர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory