» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அருகே குட்டையில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 10:24:57 AM (IST)
தூத்துக்குடி அருகே குட்டையில் மூழ்கி தொழிலாளி ஒருவர், உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் மறக்குடி தெருவைச் சேர்ந்தவர் ரத்தினராஜ் மகன் ஜெயராஜ் (41). இவர் தூத்துக்குடி புதிய துறைமுகக் கடற்கரைப் பகுதியில் மீன்களுக்கு ஐஸ் போடும் வேலை செய்து வந்தார். நேற்று வழக்கம்போல் தனது பணியை முடித்த ஜெயராஜ், தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குப் புறப்பட்டார்.
அப்போது, வழியில் இயற்கை உபாதை கழிப்பதற்காக ஒரு ஒதுக்குப்புறமான இடத்திற்குச் சென்றுள்ளார். அதன்பின்னர், அங்கிருந்த குட்டையில் தனது கால்களைக் கழுவ முயன்றபோது, அவர் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி குட்டைக்குள் விழுந்துள்ளார். இதில் தண்ணீரில் மூழ்கிய ஜெயராஜ் உயிருக்குப் போராடியுள்ளார்.
அப்போது அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த தெர்மல் நகர் காவல் நிலையப் போலீசார், குட்டையில் ஒருவர் விழுந்து கிடப்பதைக் கண்டு உடனடியாக அவரை மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் ஜெயராஜைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தெர்மல் நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சோபா ஜென்சி வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிவாலயங்களில் சித்ரா பௌர்ணமி விழா: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
வெள்ளி 1, மே 2026 8:43:02 PM (IST)

தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
வெள்ளி 1, மே 2026 8:21:17 PM (IST)

தூத்துக்குடியில் உழைப்பாளர் தினம்: மேயர் ஜெகன் பெரியசாமி மரியாதை!
வெள்ளி 1, மே 2026 8:09:53 PM (IST)

கொலை வழக்கு: வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 1, மே 2026 8:02:02 PM (IST)

ஹெச்.எம்.எஸ். சங்கம் சார்பில் மே தின விழா!
வெள்ளி 1, மே 2026 7:39:11 PM (IST)

சட்டவிரோத மது விற்பனை: வாலிபர் கைது; 500-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல்!
வெள்ளி 1, மே 2026 7:37:00 PM (IST)









