» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் உழைப்பாளர் தினம்: மேயர் ஜெகன் பெரியசாமி மரியாதை!

வெள்ளி 1, மே 2026 8:09:53 PM (IST)



தூத்துக்குடியில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, ஆயிரம் பிறை பூங்காவில் அமைந்துள்ள தொழிலாளர் சிலைக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொழிலாளர்களின் உழைப்பையும் தியாகத்தையும் போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் தேதி உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இன்று தூத்துக்குடி ஆயிரம் பிறை பூங்காவில் உள்ள தொழிலாளர் சிலைக்கு மேயர் மலர் தூவி தனது மரியாதையைச் செலுத்தினார்.

இந்நிகழ்வில் வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், பகுதி செயலாளர் தொ. நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் தனலட்சுமி மற்றும் அந்தோணி மார்ஷலின் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital






Thoothukudi Business Directory