» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
வெள்ளி 1, மே 2026 8:21:17 PM (IST)

காமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற மணிமதிக்கு, பாராட்டு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரேவா பிளாசாவில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, மகிழ்வோர் மன்ற நிறுவனர் டாக்டர் ஸ்ரீ வெங்கடேஷ் தலைமை வகித்தார். மகிழ்வோர் மன்ற இயக்குனர் ஜான்கணேஷ் முன்னிலை வகிக்க, நாடார் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் செல்வின் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் மணிமதி அவர்களுக்குப் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் நேரில் வாழ்த்துத் தெரிவித்து நினைவுப் பரிசுகளை வழங்கினர்.
விழாவில் பசும்பொன் கல்வி அறக்கட்டளை தலைவர் பரமசிவம், திருவள்ளுவர் மன்ற நிர்வாகிகள் கருத்தப்பாண்டி மற்றும் நம் சீனிவாசன், ஜெ. டிவி கேபிள் ராஜு, முத்தமிழ் மன்ற தலைவர் வரகவி முருகேசன், மற்றும் இலக்கியச் சாரல் தினகரன், கம்பன் கழகச் செயலாளர் சரவணச்செல்வன், கல்லூரி பேராசிரியர் நவநீதன், மகிழ்வோர் மன்ற காப்பாளர்கள் சேர்ம துரை மற்றும் துரைராஜ், ஆசிரியர்கள் அருணாசலம் மற்றும் கனகராஜ், இளையரசனேந்தல் உதவி தலைமை ஆசிரியர் முருகசரஸ்வதி மற்றும் விநாயக சுந்தரி உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றுத் தலைமை ஆசிரியரைப் பாராட்டிப் பேசினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிவாலயங்களில் சித்ரா பௌர்ணமி விழா: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
வெள்ளி 1, மே 2026 8:43:02 PM (IST)

தூத்துக்குடியில் உழைப்பாளர் தினம்: மேயர் ஜெகன் பெரியசாமி மரியாதை!
வெள்ளி 1, மே 2026 8:09:53 PM (IST)

கொலை வழக்கு: வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 1, மே 2026 8:02:02 PM (IST)

ஹெச்.எம்.எஸ். சங்கம் சார்பில் மே தின விழா!
வெள்ளி 1, மே 2026 7:39:11 PM (IST)

சட்டவிரோத மது விற்பனை: வாலிபர் கைது; 500-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல்!
வெள்ளி 1, மே 2026 7:37:00 PM (IST)

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய 70-வது ஆண்டு திருவிழா: கால் நாட்டு விழாவுடன் பணிகள் தொடக்கம்!
வெள்ளி 1, மே 2026 7:31:49 PM (IST)









