» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சட்டவிரோத மது விற்பனை: வாலிபர் கைது; 500-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல்!
வெள்ளி 1, மே 2026 7:37:00 PM (IST)
கோவில்பட்டி அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 500-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நடத்திய சோதனையில், சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட கயத்தாறு பகுதியைச் சேர்ந்த ஒருவரை இன்று கைது செய்தனர்.
கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் மீகா மற்றும் போலீசார் இன்று கயத்தாறு மற்றும் அய்யனார் ஊத்து பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அய்யனார் ஊத்து பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்த ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில், அவர் கயத்தாறு பகுதியைச் சேர்ந்த ராஜா (35) என்பது தெரியவந்தது. மேலும், அவர் அந்தப் பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 562 மது பாட்டில்கள், ரொக்கப் பணம் ரூ.1,600 மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவம் குறித்து கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிவாலயங்களில் சித்ரா பௌர்ணமி விழா: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
வெள்ளி 1, மே 2026 8:43:02 PM (IST)

தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
வெள்ளி 1, மே 2026 8:21:17 PM (IST)

தூத்துக்குடியில் உழைப்பாளர் தினம்: மேயர் ஜெகன் பெரியசாமி மரியாதை!
வெள்ளி 1, மே 2026 8:09:53 PM (IST)

கொலை வழக்கு: வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 1, மே 2026 8:02:02 PM (IST)

ஹெச்.எம்.எஸ். சங்கம் சார்பில் மே தின விழா!
வெள்ளி 1, மே 2026 7:39:11 PM (IST)

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய 70-வது ஆண்டு திருவிழா: கால் நாட்டு விழாவுடன் பணிகள் தொடக்கம்!
வெள்ளி 1, மே 2026 7:31:49 PM (IST)









