» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தேர்தல் நடைமுறைகள்: வ.உ.சிதம்பரம் கல்லூரி என்எஸ்எஸ் மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு முகாம்!

புதன் 11, மார்ச் 2026 11:32:32 AM (IST)



தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் பெண்கள் அணி சார்பில், புதுக்கோட்டை கிராமத்தில் பொதுமக்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில், வட்டாட்சியர் அலுவலக வருவாய் ஆய்வாளர்கள்  அந்தோணி ராஜ் மற்றும்  தேவசகாயம் ஆகியோர் கலந்துகொண்டு தேர்தல் நடைமுறைகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் பயன்பாடு குறித்துப் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர். தாமிரபரணி வடகால் பாசன நீரைப் பயன்படுத்தும் விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த  சண்முகம் இதில் பங்கேற்றுச் சிறப்பித்தார்.

பிற்பகல் அமர்வில், மாவட்டச் சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பேனல் வழக்கறிஞர்  சுதர்சன் மற்றும் சட்ட உதவி தன்னார்வலர் பியூலா விஜயா ரூபி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.பொதுமக்களுக்கான அடிப்படைச் சட்ட உரிமைகள், சமூக நீதி மற்றும் இலவசச் சட்ட உதவியைப் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து இதன்போது விளக்கப்பட்டது.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இரண்டாம் ஆண்டு இயற்பியல் மாணவி எம். பேச்சியம்மாள் வரவேற்புரை ஆற்றினார். நிறைவாக, இரண்டாம் ஆண்டு இயற்பியல் மாணவி எம். அருள் தேவி நன்றியுரை வழங்கினார். இந்த விழிப்புணர்வு முகாமினை வ.உ.சிதம்பரம் கல்லூரி NSS அணி 68-ன் திட்ட அலுவலர்  ம. ஆரோக்கிய செல்வ சுந்தரி வழிநடத்தினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory