» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாடு குறுக்கே வந்ததால் பைக் விபத்து: வாலிபர் உயிரிழப்பு

புதன் 11, மார்ச் 2026 8:46:16 AM (IST)

தூத்துக்குடி அருகே சாலையில் திடீரென குறுக்கே வந்த மாட்டின் மீது பைக் மோதிய விபத்தில், வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள க.சாயர்புரம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தனராஜ். இவரது மகன் கணேஷ் குமார் (27). கட்டிடத் தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. நேற்று முன்தினம் இரவு, கணேஷ் குமார் தனது மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டையில் உள்ள உணவகம் ஒன்றிற்குச் சாப்பிடுவதற்காகப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இரவு சுமார் 11 மணியளவில் தேரி ரோட்டில் உள்ள ஒரு தனியார் தும்பு ஆலை அருகே அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாகச் சாலையின் குறுக்கே மாடு ஒன்று திடீரென வந்துள்ளது. இதில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், மாட்டின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட கணேஷ் குமார், பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து குறித்துத் தகவல் அறிந்த சாயர்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த கணேஷ் குமாரின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது தந்தை தனராஜ் அளித்த புகாரின் பேரில், சாயர்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory