» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்: அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்!

புதன் 11, மார்ச் 2026 3:24:29 PM (IST)



அத்திமரப்பட்டியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை  அமைச்சர் கீதா ஜீவன்  திறந்து வைத்து, விவசாயிகளின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில், தூத்துக்குடி மாவட்டம் அத்திமரப்பட்டியில் புதிய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இன்று (புதன்கிழமை) முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், இந்த நெல் கொள்முதல் நிலையத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்து, விவசாயிகளின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். இதன் மூலம் அத்திமரப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை அரசு நிர்ணயித்த விலையில் எளிதாக விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் சிவகுமார், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பாஸ்டின் வினு, மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் பாலகுருசாமி, கவுன்சிலர்கள் விஜயகுமார், ராஜதுரை, விவசாயிகள் சங்கத் தலைவர் பூபதி நாடார், உப்பாற்று ஓடை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி, துணைத் தலைவர் திருமால் மற்றும் ஆட்சி மண்டல உறுப்பினர்கள், ஆலோசனை குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory