» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்: அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்!
புதன் 11, மார்ச் 2026 3:24:29 PM (IST)

அத்திமரப்பட்டியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்து, விவசாயிகளின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில், தூத்துக்குடி மாவட்டம் அத்திமரப்பட்டியில் புதிய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இன்று (புதன்கிழமை) முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், இந்த நெல் கொள்முதல் நிலையத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்து, விவசாயிகளின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். இதன் மூலம் அத்திமரப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை அரசு நிர்ணயித்த விலையில் எளிதாக விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் சிவகுமார், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பாஸ்டின் வினு, மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் பாலகுருசாமி, கவுன்சிலர்கள் விஜயகுமார், ராஜதுரை, விவசாயிகள் சங்கத் தலைவர் பூபதி நாடார், உப்பாற்று ஓடை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி, துணைத் தலைவர் திருமால் மற்றும் ஆட்சி மண்டல உறுப்பினர்கள், ஆலோசனை குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மார்ச் 13ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் தகவல்
புதன் 11, மார்ச் 2026 5:41:12 PM (IST)

சைபர் மோசடியில் இழந்த ரூ.53.75 லட்சம் மீட்பு: உரிமையாளர்களிடம் எஸ்பி நேரில் ஒப்படைப்பு
புதன் 11, மார்ச் 2026 5:23:22 PM (IST)

திமுகவை வீழ்த்த அனைவரும் இணைய வேண்டும் : தவெக குறித்து கடம்பூர் ராஜூ கருத்து
புதன் 11, மார்ச் 2026 4:39:19 PM (IST)

தூத்துக்குடியில் மார்ச் 15-ல் குரூப்-2 முதன்மைத் தேர்வு – 487 விண்ணப்பதாரர்கள் பங்கேற்பு!
புதன் 11, மார்ச் 2026 4:03:10 PM (IST)

இருசக்கர வாகன மானியம் பெற விண்ணப்பிக்கலாம் : உலமாக்களுக்கு ஆட்சியர் இளம்பகவத் அழைப்பு
புதன் 11, மார்ச் 2026 3:41:48 PM (IST)

தூத்துக்குடியில் கருப்புப் பையில் மனித மண்டையோடு : போலீஸ் விசாரணை
புதன் 11, மார்ச் 2026 3:23:59 PM (IST)








