» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சைபர் மோசடியில் இழந்த ரூ.53.75 லட்சம் மீட்பு: உரிமையாளர்களிடம் எஸ்பி நேரில் ஒப்படைப்பு
புதன் 11, மார்ச் 2026 5:23:22 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு சைபர் குற்ற வழக்குகளில் மோசடி செய்யப்பட்ட ரூ.53,75,896 பணத்தை மீட்ட சைபர் குற்றப்பிரிவு போலீசார், அதனை உரிய உரிமையாளர்களிடம் இன்று ஒப்படைத்தனர்.
ஆன்லைன் முதலீடு மூலம் அதிக லாபம், போலி அரசு வேலை வாய்ப்பு மற்றும் 'டிஜிட்டல் அரெஸ்ட்' போன்ற பல்வேறு சைபர் மோசடிகளில் சிக்கிப் பணத்தை இழந்த 20 பேர், தேசிய சைபர் குற்றப் புகார் இணையதளத்தில் (NCRP) புகார் பதிவு செய்திருந்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன் உத்தரவின்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) தீபு மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் சாந்தி தலைமையிலான சைபர் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொழில்நுட்ப ரீதியாக நடத்தப்பட்ட இந்த விசாரணையில்:
மோசடிக்குத் தொடர்புடைய வங்கி கணக்குகள் கண்டறியப்பட்டு உடனடியாக முடக்கப்பட்டன. சட்ட ரீதியான நடவடிக்கைகளின் மூலம் பாதிக்கப்பட்ட 20 பேரின் வங்கி கணக்குகளிலிருந்து திருடப்பட்ட மொத்தம் ₹53,75,896 பணம் முழுமையாக மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட இந்தப் பணத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன், இன்று அலுவலகத்தில் வைத்துப் பாதிக்கப்பட்ட நபர்களிடம் நேரில் ஒப்படைத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்: எஸ்பி மதன் நேரில் விசாரணை
புதன் 11, மார்ச் 2026 5:49:28 PM (IST)

தூத்துக்குடியில் மார்ச் 13ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் தகவல்
புதன் 11, மார்ச் 2026 5:41:12 PM (IST)

திமுகவை வீழ்த்த அனைவரும் இணைய வேண்டும் : தவெக குறித்து கடம்பூர் ராஜூ கருத்து
புதன் 11, மார்ச் 2026 4:39:19 PM (IST)

தூத்துக்குடியில் மார்ச் 15-ல் குரூப்-2 முதன்மைத் தேர்வு – 487 விண்ணப்பதாரர்கள் பங்கேற்பு!
புதன் 11, மார்ச் 2026 4:03:10 PM (IST)

இருசக்கர வாகன மானியம் பெற விண்ணப்பிக்கலாம் : உலமாக்களுக்கு ஆட்சியர் இளம்பகவத் அழைப்பு
புதன் 11, மார்ச் 2026 3:41:48 PM (IST)

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்: அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்!
புதன் 11, மார்ச் 2026 3:24:29 PM (IST)








