» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்: எஸ்பி மதன் நேரில் விசாரணை
புதன் 11, மார்ச் 2026 5:49:28 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் இன்று எஸ்பி சி.மதன் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
அதன்படி இன்று மாவட்ட காவல் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த 54 மனுதாரர்கள் தங்கள் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதனிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொடூர கொலை: பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
புதன் 11, மார்ச் 2026 8:15:49 PM (IST)

தூத்துக்குடியில் மார்ச் 13ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் தகவல்
புதன் 11, மார்ச் 2026 5:41:12 PM (IST)

சைபர் மோசடியில் இழந்த ரூ.53.75 லட்சம் மீட்பு: உரிமையாளர்களிடம் எஸ்பி நேரில் ஒப்படைப்பு
புதன் 11, மார்ச் 2026 5:23:22 PM (IST)

திமுகவை வீழ்த்த அனைவரும் இணைய வேண்டும் : தவெக குறித்து கடம்பூர் ராஜூ கருத்து
புதன் 11, மார்ச் 2026 4:39:19 PM (IST)

தூத்துக்குடியில் மார்ச் 15-ல் குரூப்-2 முதன்மைத் தேர்வு – 487 விண்ணப்பதாரர்கள் பங்கேற்பு!
புதன் 11, மார்ச் 2026 4:03:10 PM (IST)

இருசக்கர வாகன மானியம் பெற விண்ணப்பிக்கலாம் : உலமாக்களுக்கு ஆட்சியர் இளம்பகவத் அழைப்பு
புதன் 11, மார்ச் 2026 3:41:48 PM (IST)








