» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
லாரி ஷெட் உரிமையாளர் கொலை:வாலிபர் கைது!
புதன் 11, மார்ச் 2026 11:06:16 AM (IST)
தூத்துக்குடியில் லாரி ஷெட் உரிமையாளர் கொலை வழக்கில் அவரது உறவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மச்சாது நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (52). லாரி ஷெட் உரிமையாளராகத் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 4ஆம் தேதி இரவு, தூத்துக்குடி 4-வது கேட் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினரைப் பார்ப்பதற்காக சென்றுள்ளார். அங்குச் சென்ற அவர், தனது மற்றொரு உறவினருடன் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார்.
அவர்கள் இருவரும் தூத்துக்குடி ஆதிபராசக்தி நகர் மேற்குப் பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்று மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்த உறவினர், அங்கிருந்த மதுபாட்டிலால் ஆறுமுகத்தை தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்.
இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த அவரது உறவினராக (சித்தி மகன்) ஆனந்த் (38) என்பவரை நேற்று கைது செய்துள்ளனர். சம்பவ நாளன்று மது அருந்திய போது தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தினரை பற்றியும் அவதூறாக பேசியதால் ஆறுமுகத்தை பீர் பாட்டிலால் தாக்கி கொலை செய்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!
புதன் 11, மார்ச் 2026 12:42:02 PM (IST)

தேர்தல் நடைமுறைகள்: வ.உ.சிதம்பரம் கல்லூரி என்எஸ்எஸ் மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு முகாம்!
புதன் 11, மார்ச் 2026 11:32:32 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு தொடங்கியது: 22ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்பு
புதன் 11, மார்ச் 2026 10:44:53 AM (IST)

தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடக்கம்!
புதன் 11, மார்ச் 2026 10:26:02 AM (IST)

தூத்துக்குடியில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் நிலை? உணவகங்கள் மூடப்படும் அபாயம்!
புதன் 11, மார்ச் 2026 8:52:01 AM (IST)

ஸ்டூடியோ புகுந்து போட்டோகிராபரை வெட்டிய வழக்கில் ஒருவர் கைது - பார் ஊழியருக்கு வலைவீச்சு!
புதன் 11, மார்ச் 2026 8:50:33 AM (IST)








