» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு தொடங்கியது: 22ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்பு
புதன் 11, மார்ச் 2026 10:44:53 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. 22,221 மாணவ மாணவியர்கள் தேர்வினை எழுதினர்.
2025-2026 ஆம் கல்வியாண்டில், இடைநிலை (பத்தாம் வகுப்பு) பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியது. வருகிற ஏப்.06ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 109 தேர்வு மையங்களில் 22,221 தேர்வர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதவுள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு 109 முதன்மைக் கண்காணிப்பாளர்களும், மூன்று கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளரும் 109 துறை அலுவலர்கள், 1280 அறைக் கண்காணிப்பாளர்கள், 129 நிலையான படையினர், 285 சொல்வதை எழுதுபவர், 24 வழித்தட அலுவலர்கள், 10 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 218 ஆசிரியரல்லா பணியாளர்கள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அனைத்து தேர்வு மையங்களிலும் காற்றோட்டமான தேர்வறைகள், தூய்மையான குடிநீர்வசதி, தூய்மையான கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கென தரைதளத்தில் உள்ள தேர்வறைகளில் தேர்வெழுதவும் சொல்வதை எழுதுபவர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களுக்கு உரிய போக்குவரத்து வசதி, காவலர் பாதுகாப்பு வசதி, தடையில்லா மின்சாரம் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, தேர்வுகள் நல்ல முறையில் நடைபெற தகுந்த வசதிகள் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!
புதன் 11, மார்ச் 2026 12:42:02 PM (IST)

தேர்தல் நடைமுறைகள்: வ.உ.சிதம்பரம் கல்லூரி என்எஸ்எஸ் மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு முகாம்!
புதன் 11, மார்ச் 2026 11:32:32 AM (IST)

லாரி ஷெட் உரிமையாளர் கொலை:வாலிபர் கைது!
புதன் 11, மார்ச் 2026 11:06:16 AM (IST)

தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடக்கம்!
புதன் 11, மார்ச் 2026 10:26:02 AM (IST)

தூத்துக்குடியில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் நிலை? உணவகங்கள் மூடப்படும் அபாயம்!
புதன் 11, மார்ச் 2026 8:52:01 AM (IST)

ஸ்டூடியோ புகுந்து போட்டோகிராபரை வெட்டிய வழக்கில் ஒருவர் கைது - பார் ஊழியருக்கு வலைவீச்சு!
புதன் 11, மார்ச் 2026 8:50:33 AM (IST)








