» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடக்கம்!
புதன் 11, மார்ச் 2026 10:26:02 AM (IST)

தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் சங்கத்தின் (ஏஐசிசிடியூ) சார்பில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் இன்று காலை தொடங்கியது.
தமிழக அரசின் அரசாணை படி 2017 முதல் நிலுவையில் உள்ள ஊதிய பாக்கியை வழங்க வேண்டும். தனியார் மயமாக்கலை கைவிட வேண்டும். தொழிற்சங்கத் தலைவர் பொன்ராஜ் மீதான பணி நீக்க உத்தரவை ரத்து செய்து மீண்டும் பணி வழங்க வேண்டும். 2026-ஆம் ஆண்டிற்கான குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்தி, PF மற்றும் ESI திட்டங்களில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஏஐசிசிடியூ தூய்மைப் பணியாளர் சங்கத்தின் சார்பில் மதுரை பைபாஸ் ரோடு எப்.சி.ஐ ரவுண்டானா அருகில் சங்க அலுவலகத்தில் வைத்து மாநிலத் துணைத் தலைவர் சகாயம் தலைமையில் தொடர் உண்ணாவிரத போராட்டம் இன்று தொடங்கியது. இதில் நிர்வாகிகள் மின்னல் அம்ஜத், சிவராமன், பொன்ராஜ் உள்ளிட்ட பலர் பலர் கலந்துகொண்டனர். அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டுத் தீர்வு காணாவிட்டால், திட்டமிட்டபடி போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!
புதன் 11, மார்ச் 2026 12:42:02 PM (IST)

தேர்தல் நடைமுறைகள்: வ.உ.சிதம்பரம் கல்லூரி என்எஸ்எஸ் மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு முகாம்!
புதன் 11, மார்ச் 2026 11:32:32 AM (IST)

லாரி ஷெட் உரிமையாளர் கொலை:வாலிபர் கைது!
புதன் 11, மார்ச் 2026 11:06:16 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு தொடங்கியது: 22ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்பு
புதன் 11, மார்ச் 2026 10:44:53 AM (IST)

தூத்துக்குடியில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் நிலை? உணவகங்கள் மூடப்படும் அபாயம்!
புதன் 11, மார்ச் 2026 8:52:01 AM (IST)

ஸ்டூடியோ புகுந்து போட்டோகிராபரை வெட்டிய வழக்கில் ஒருவர் கைது - பார் ஊழியருக்கு வலைவீச்சு!
புதன் 11, மார்ச் 2026 8:50:33 AM (IST)








