» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூரில் வாலிபர் கொடூர கொலை: பக்கத்து வீட்டுக்காரர் வெறிச்செயல்!
வியாழன் 15, ஜனவரி 2026 8:46:26 PM (IST)
திருச்செந்தூரில் மின் கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வாலிபரை கொடூரமாக கொலை செய்த பக்கத்து வீட்டுக்காரரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வண்டிக்கார தெருவைச் சேர்ந்தவர் கணேசன் மகன் ஏழுமலை வாசன் (27), கூலி வேலை செய்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ராஜேந்திரன் மகன் இசக்கி ராஜா (40) இவர்கள் இருவரும் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்கள். 2 பேர் வீட்டுக்கும் ஒரே மின் இணைப்பு என்பதால்2 பேரும் மின் கட்டணத்தை பகிர்ந்து கட்டுவார்களாம்.
இந்த நிலையில் மின் கட்டணம் கட்டுவதற்காக ஏழுமலை வாசன், இசக்கி ராஜாவிடம் பணம் கேட்டாராம். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் நேற்று இரவு ஏழுமலை வாசன் இசக்கி ராஜா வீட்டுக்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்து விட்டாராம். இதையடுத்து இன்று இசக்கிராஜா மின் இணைப்பு எப்படி துண்டிக்கலாம் என்று ஏழுமலை வாசனிடம் தகராறு செய்தாராம்.
அப்போது ஆத்திரமடைந்த இசக்கி ராஜா, ஏழுமலை வாசனை சரமாரியாக கத்தியால் குத்தினாராம். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, இசக்கி ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காலையில் தனது வீட்டில் பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடிய ஏழுமலை வாசன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!
புதன் 11, மார்ச் 2026 12:42:02 PM (IST)

தேர்தல் நடைமுறைகள்: வ.உ.சிதம்பரம் கல்லூரி என்எஸ்எஸ் மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு முகாம்!
புதன் 11, மார்ச் 2026 11:32:32 AM (IST)

லாரி ஷெட் உரிமையாளர் கொலை:வாலிபர் கைது!
புதன் 11, மார்ச் 2026 11:06:16 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு தொடங்கியது: 22ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்பு
புதன் 11, மார்ச் 2026 10:44:53 AM (IST)

தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடக்கம்!
புதன் 11, மார்ச் 2026 10:26:02 AM (IST)

தூத்துக்குடியில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் நிலை? உணவகங்கள் மூடப்படும் அபாயம்!
புதன் 11, மார்ச் 2026 8:52:01 AM (IST)








