» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் விதிமீறி இயக்கப்பட்ட 15 பைக்குகள் பறிமுதல்: போலீசார் நடவடிக்கை!

புதன் 14, ஜனவரி 2026 8:55:44 AM (IST)

தூத்துக்குடியில் போக்குவரத்து விதிகளை மீறிய 15 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.  ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட எஸ்பி சிலம்பரசன் உத்தரவின் பேரில் தூத்துக்குடியில் போலீசார் நேற்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். தூத்துக்குடி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, தூத்துக்குடியில் உள்ள கல்லூரிகளில் பொங்கல் விழா நடந்ததால், மாணவர்கள் மோட்டார் சைக்கிள்களில் விதிகளை மீறி சுற்றித்திரிந்தனர்.

இதைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில் மூன்று பேர் பயணித்தது, அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்ஸர்களை பொருத்தி இருந்தது, ஹெல்மெட் அணியாதது போன்ற குற்றச்சாட்டுகளில் 15 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவைகளுக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்ஸர்கள் அகற்றப்பட்டன. மேலும் நம்பர் பிளேட் இல்லாத வாகனங்களில் நம்பர் பிளேட் பொருத்தப்பட்டு திருப்பி கொடுக்கப்பட்டன. இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory