» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாரதியார் வித்யாலயம் பள்ளியில் பொங்கல் விழா

செவ்வாய் 13, ஜனவரி 2026 3:33:25 PM (IST)


தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

பள்ளி விளையாட்டு மைதானத்தின் நடுவே சுற்றிலும் கரும்புகள் கட்டப்பட்டு அடுப்புகள் வைத்து அதில் வெண்கலப் பானையில் பள்ளி ஆசிரியர்கள் பொங்கல் வைத்தனர் மாணவ, மாணவியர்கள் வேஷ்டி, சட்டை, பாவாடை தாவணியில் தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையில் உற்சாகமாக கலந்து கொண்டு பொங்கல் பொங்கி வரும் பொழுது ஒரே சமயத்தில் பொங்கலோ பொங்கல் என்று உற்சாக குரல் எழுப்பி பொங்கல் பண்டிகையை கொண்டாடினர் 

மாணவ மாணவிகள் நம்முடைய பாரம்பரியத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த விழா நடத்தப்படுவதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி மற்றும் ஆசிரிய ஆசிரியைகள், பயிற்சி ஆசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர். அதைத்தொடர்ந்து பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கரும்பு, சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து

SureshJan 15, 2026 - 11:43:58 PM | Posted IP 162.1*****

Super,congratulations

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory