» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழக அரசைக் கண்டித்து ஜன.20 காலவரையற்ற வேலைநிறுத்தம்: சத்துணவு ஊழியர்கள் முடிவு

செவ்வாய் 13, ஜனவரி 2026 8:01:54 AM (IST)

தமிழக அரசைக் கண்டித்து ஜன. 20ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

கடந்த 2021ஆம் ஆண்டு திமுக சார்பில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், குடும்பப் பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், பணி ஓய்வின்போது பணிக்கொடை, காலி பணியிடங்கள் நிரப்பப்படும் போன்ற வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. ஆனால், சத்துணவு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும், அரசு இதுவரை எந்த கோரிக்கையையும் நிறைவேற்றவில்லையாம்.

இந்நிலையில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க தூத்துக்குடி மாவட்டம் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த ஆயத்த மாநாடு மாவட்டத் தலைவர் பெருமாள் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலர் ஜெயபாக்கியம், அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் முருகன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள், உதவியாளர்கள் பங்கேற்றனர்.

அதில், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்; இல்லையென்றால் திட்டமிட்டபடி வரும் ஜன. 20ஆம் தேதி தமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களை மூடி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.


மக்கள் கருத்து

முட்டாள்Jan 13, 2026 - 04:28:02 PM | Posted IP 172.7*****

தனிமக ஒரு நாடக கம்பெனி அதை நம்புபவன் எல்லாம் முட்டாள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory