» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கல்: வியாபாரி கைது!
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 9:11:49 AM (IST)
கோவில்பட்டியில் வீட்டில் பதுக்கிய 50 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வியாபாரியை கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்கிறவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவில்பட்டி வடக்கு திட்டங்குளத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (65). வியாபாரியான இவர் தனது வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கோவில்பட்டி கிழக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று மாரிமுத்துவின் வீட்டில் திடீர் சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் 2 சாக்கு மூட்டைகளில் 220 பெரிய பாக்கெட்டுகளில் சுமார் 50 புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து மாரிமுத்துவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் புகையிலைப் பொருட்களை வீட்டில் மறைத்து வைத்து, கடைகளுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் நாளை தொடங்குகிறது
திங்கள் 14, ஏப்ரல் 2025 8:42:03 AM (IST)

அதிமுக - பாஜக கூட்டணியைப் பார்த்து திமுக கதிகலங்கி போச்சு: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு!
திங்கள் 14, ஏப்ரல் 2025 8:17:29 AM (IST)

சிறுபான்மை மக்களுக்கு எப்போதுமே முதல்வர் உறுதுணையாக இருப்பார்: அமைச்சர் கீதா ஜீவன்
திங்கள் 14, ஏப்ரல் 2025 8:04:20 AM (IST)

தமிழகத்தில் 234 தொகுதியிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்: நயினார் நாகேந்திரன் பேட்டி
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 7:37:45 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: 5மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 6:55:27 PM (IST)

அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நிழல் இல்லா நாள் செயல் விளக்க பயிற்சி
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 6:46:06 PM (IST)
