» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கல்: வியாபாரி கைது!

ஞாயிறு 6, ஏப்ரல் 2025 9:11:49 AM (IST)

கோவில்பட்டியில் வீட்டில் பதுக்கிய 50 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வியாபாரியை கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்கிறவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவில்பட்டி வடக்கு திட்டங்குளத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (65). வியாபாரியான இவர் தனது வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கோவில்பட்டி கிழக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று மாரிமுத்துவின் வீட்டில் திடீர் சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் 2 சாக்கு மூட்டைகளில் 220 பெரிய பாக்கெட்டுகளில் சுமார் 50 புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து மாரிமுத்துவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் புகையிலைப் பொருட்களை வீட்டில் மறைத்து வைத்து, கடைகளுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital




New Shape Tailors

CSC Computer Education




Thoothukudi Business Directory