» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அஞ்சலங்களில் பொதுசேவை மையம்: பொது மக்கள் பயன்பெற அழைப்பு

புதன் 19, மார்ச் 2025 3:46:48 PM (IST)

தூத்துக்குடி அஞ்சலங்களில் செயல்படும் பொதுசேவை மையம் மூலம் மின் கட்டணம் செலுத்துதல், மொபைல் ரீசார்ஜ் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. 

பொதுமக்களுக்காக பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் பெறும் "CSC பொது சேவை மையம்" தூத்துக்குடியிலுள்ள அனைத்து தலைமை அஞ்சலகங்கள், துணை அஞ்சலகங்கள் மற்றும் கிளை அஞ்சலகங்களிலும் செயல்படுகிறது. இதன் மூலம் கீழ்கண்ட சேவைகளைப் பொதுமக்கள் எளிதாகப் பெறலாம். 

மின் கட்டணம் செலுத்துதல், ஜீவன் பிரமான் -ஓய்வூதியர் சான்று, மொபைல் ரீசார்ஜ், லேண்ட்லைன் கட்டணம்/பிராட்பேண்ட் கட்டணம் / DTH ரீசார்ஜ்,  LIC பாலிசி / பிற தனியார் இன்சூரன்ஸ்  பிரீமியம், விமான மற்றும் பேருந்து  பயணசீட்டு முன்பதிவு, பான் கார்டு விண்ணப்பம்,  பாஸ்போர்ட் விண்ணப்பம், FASTAG பில்  செலுத்துதல், தேசிய ஓய்வூதிய திட்டம்(NPS ), பயிர் காப்பீட்டு திட்டம் (PMFBY)  மற்றும் பல சேவைகள் வழங்கப்பட்டு வருவதாக முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சி.முருகன் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital



New Shape Tailors

CSC Computer Education





Thoothukudi Business Directory