» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மனைவி பிரிந்து சென்றதால் தகராறு: சின்ன மாமனாரை கல்லால் அடித்துக்கொன்ற வாலிபர்!

வியாழன் 28, ஆகஸ்ட் 2025 8:46:36 PM (IST)

தூத்துக்குடி அருகே பிரிந்து சென்ற காதல் மனைவியை குடும்பம் நடத்த வீட்டுக்கு அழைத்தபோது ஏற்பட்ட தகராறில் சின்ன மாமனாரை கல்லால் அடித்து கொலை செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே குறுக்குசாலை கிராமத்தைச் சேர்ந்தவர் தாசன் பெர்ணன்டோ. இவரது மகன்கள் தாமஸ், மரிய ஆக்னஸ் செல்வம் (45). இவர்களில் தாமசுக்கு திருமணமாகி இசக்கித்தாய் என்ற மனைவியும், முகிலா என்ற மகளும் உள்ளனர். மரியா ஆக்னஸ் செல்வத்துக்கு திருமணமாகவில்லை. இதனால் அவர் தனது அண்ணன் தாமஸ் குடும்பத்தினருடன் ஒரே வீட்டில் தங்கியிருந்து கூலி வேலைக்கு சென்று வந்தார். 

கீழச்சய்த்தலை சேர்ந்தவர் மாரிச்செல்வம் (27). பெயிண்டர். இவரும், முகிலாவும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் சில வாரங்களிலேயே தம்பதி இடையே கடும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் வேதனை அடைந்த முகிலா கடந்த 4 நாட்களுக்கு முன்பு தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். இதனை சற்றும் எதிர்பாராத மாரிச்செல்வம் தனது மனைவி முகிலாவின் சித்தப்பாவான மரிய ஆக்னஸ் செல்வத்தை செல்போனில் தொடர்புகொண்டு முகிலாவை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார். 

அப்போது இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு மாரிச்செல்வம் தனது மனைவியின் பெற்றோர் வீட்டுக்கு நேரடியாக சென்றார்.அங்கிருந்த மரிய ஆக்னஸ் செல்வத்திடம் தனது மனைவியை குடும்பம் நடத்த அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மாரிச்செல்வம் அருகில் கடந்த கல்லை எடுத்து மரிய ஆக்னஸ் செல்வத்தின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

அதற்குள் மாரிச்செல்வம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.  இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்யேசுதாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மரிய ஆக்னஸ் செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், வழக்கு பதிவு செய்து மாரிச்செல்வத்தை வலைவீசி தேடி வருகின்றனர். சம்பவ இடத்தில் மணியாச்சி டிஎஸ்பி அருள் விசாரணை நடத்தி வருகிறார். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital

CSC Computer Education







Thoothukudi Business Directory