» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது - மேலும் மூவருக்கு வலைவீச்சு!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:26:04 AM (IST)

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்புள்ள கஞ்சாவை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் சுரேஷ் ராமச்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், தலைமை காவலர்கள் மணிகண்டன், இருதய ராஜ்குமார், இசக்கிமுத்து, முதல் நிலைக் காவலர் பழனி பால முருகன், பேச்சி ராஜா ஆகியோர் நள்ளிரவு 01.00 மணியளவில், தூத்துக்குடி துறைமுகம் - மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஒரு கார் மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த தூத்துக்குடி மட்டகடை பகுதியைச் சேர்ந்த கென்னடி மகன் சுதர்சன் (33) மற்றும் தூத்துக்குடி தேவர் காலனியை சேர்ந்த முட்டை சுரேஷ் உட்பட நான்கு நபர்கள், சுமார் 100 கிலோ கஞ்சா மூட்டைகளை கொண்டு வந்து, அதனை இலங்கைக்கு கடத்துவதற்காக மற்றொரு கும்பலுக்கு கைமாற்றி விடுவதற்காக கொண்டு வந்துள்ளனர்.
அப்போது, போலீசாரைக் கண்டதும் அவர்கள் தப்பி செல்ல முயன்றதில், சுதர்சன் என்பவரை மட்டும் போலீசார் மடக்கி பிடித்தனர். அவரது ஸ்கூட்டர் மற்றும் 100 கிலோ கஞ்சா பிடிபட்டது. பிடிபட்ட சுதர்சன் மீது ஒரு கொலை வழக்கு, ஒரு கஞ்சா போதை பொருள் வைத்திருந்த வழக்கு மற்றும் கொலை கொலை முயற்சி வழக்குகள் உட்பட ஏழு வழக்குகள் இருப்பதாக தெரியவருகிறது. இதையடுத்து சுதர்சனை போலீசார் கைது செய்தனர். கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ஒரு கோடி ஆகும். தப்பியோடிய மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பட்டினமருதூரில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் கள ஆய்வு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:30:06 PM (IST)

பிரதமர் மோடி பதவி விலக கோரி காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:09:24 PM (IST)

பைக் மீது கார் மோதியதில் எலெக்ட்ரிசியன் பலி: தூத்துக்குடியில் பரிதாபம்!!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:39:17 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)










