» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஷிப்பிங் நிறுவன ஊழியர் மரணம்: துறைமுகத்தில் உறவினர்கள் முற்றுகைப் போராட்டம்!
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 4:26:07 PM (IST)
தூத்துக்குடியில் தனியார் மரைன் ஷிப்பிங் நிறுவன ஊழியர் மரணத்திற்கு இழப்பீடு வழங்க கோரி குடும்பத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் பழைய துறைமுகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி போல்டன்புரம், மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் சந்தனராஜ், இவர் பீச் ரோட்டில் அமைந்துள்ள ஹரி அண்ட் கோ நிறுவனத்தின் கீழ் செயல்படும் தஸ்நேவிஸ் மரைன் ஷிப்பிங் என்ற நிறுவனத்தில் கடந்த 5 ஆண்டுகளாக மேலாளராக வேலை பார்த்து வருகிறார். வழக்கமாக இவர் நிறுவனம் சார்பில் பழைய துறைமுகத்தில் சரக்கு கொண்டு செல்லும் சிறிய ரக கப்பல்களில் பழுது பார்க்கும் பணியை மேற்பார்வை செய்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 25 ஆம் தேதி இரவு பழைய துறைமுகத்தில் ஒரு பார்ச்சில் (Barchi) வெல்டிங் வேலை நடந்து கொண்டிருக்கும்போது அந்த பணியை பார்வையயிடுவதற்காக சந்தனராஜ் சென்றுள்ளார். ஆனால் அவர் நின்று கொண்டிருக்கும் போது திடீரென மாயமாகி, கடலில் விழுந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே சந்தனராஜ் பணியாற்றிய நிறுவனம் சார்பில் அவருக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் அளிக்காததே அவரது மரணத்திற்கு காரணம் எனக் கூறி அவரது உறவினர்கள் கடந்த 4 நாட்களாக உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம், துறைமுக சபை நிர்வாகம் மற்றும் அவர் பணிபுரிந்து நிறுவனம் முறையாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனத் தெரிகிறது.
இந்த நிலையில், சந்தன ராஜின் உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் இன்று பழைய துறைமுகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விஷயத்தில் உடனடியாக மாவட்ட நிர்வாகம், துறைமுக ஆணையம் தலையிட்டு சந்தனராஜ் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், அவரது மனைவிக்கு துறைமுகத்தில் வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் விடுத்தனர். போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 7:49:57 PM (IST)

முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் விருப்ப மனு
புதன் 17, டிசம்பர் 2025 7:42:57 PM (IST)










