» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அருகே செப்டிக் டேங்கில் தவறி விழுந்த நாய், 4 குட்டிகள் மீட்பு!
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 4:05:29 PM (IST)

தூத்துக்குடி அருகே செப்டிக் டேங்கில் தவறி விழுந்த நாய், மற்றும் அதன் 4 குட்டிகளை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை வஉசி நகரில் புதியதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் செப்டிக் டேங்கில் நாய் தவறி விழுந்த விட்டதாக வீட்டின் உரிமையாளர் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்றனர்.
அங்கு மூடி போடப்படாத செப்டிங் டேங்கில் நாய் மற்றும் குட்டிகளின் சத்தம் கேட்டதை கண்டு, மிகவும் குறுகலான ஓட்டைப் பகுதியில் தீயணைப்பு வீரர் சக்திவேல் உள்ளே இறங்கி கயிறுகள் மூலம் முடிச்சுகள் போட்டு வெகு நேரமாக போராடி நாய் மற்றும் 4 குட்டிகளையும் மீட்டு மேலே கொண்டு வந்தார். பின்னர் தீயணைப்பு வீரர்கள் நாயையும் அதன் 4 குட்டிகளையும் பாதுகாப்பான இடத்தில் கொண்டு வைத்தனர். மேலும், செப்டிங் டேங்கில் மூடி போடுமாறும் வீட்டு உரிமையாளருக்கு அறிவுரை வழங்கினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் மீது கார் மோதியதில் எலெக்ட்ரிசியன் பலி: தூத்துக்குடியில் பரிதாபம்!!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:39:17 AM (IST)

தூத்துக்குடியில் ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது - மேலும் மூவருக்கு வலைவீச்சு!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:26:04 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)











சுதா குலையன் கரிசல்Aug 28, 2025 - 04:46:05 PM | Posted IP 162.1*****