» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே செப்டிக் டேங்கில் தவறி விழுந்த நாய், 4 குட்டிகள் மீட்பு!

வியாழன் 28, ஆகஸ்ட் 2025 4:05:29 PM (IST)



தூத்துக்குடி அருகே செப்டிக் டேங்கில் தவறி விழுந்த நாய், மற்றும் அதன் 4 குட்டிகளை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். 

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை வஉசி நகரில் புதியதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் செப்டிக் டேங்கில் நாய் தவறி விழுந்த விட்டதாக வீட்டின் உரிமையாளர் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்றனர்.

அங்கு மூடி போடப்படாத  செப்டிங் டேங்கில் நாய் மற்றும் குட்டிகளின் சத்தம் கேட்டதை கண்டு,  மிகவும் குறுகலான ஓட்டைப் பகுதியில் தீயணைப்பு வீரர் சக்திவேல் உள்ளே இறங்கி கயிறுகள் மூலம் முடிச்சுகள் போட்டு  வெகு நேரமாக போராடி நாய் மற்றும் 4 குட்டிகளையும் மீட்டு மேலே கொண்டு வந்தார். பின்னர் தீயணைப்பு வீரர்கள் நாயையும் அதன் 4 குட்டிகளையும் பாதுகாப்பான இடத்தில் கொண்டு வைத்தனர். மேலும், செப்டிங் டேங்கில் மூடி போடுமாறும் வீட்டு உரிமையாளருக்கு அறிவுரை வழங்கினர்.


மக்கள் கருத்து

சுதா குலையன் கரிசல்Aug 28, 2025 - 04:46:05 PM | Posted IP 162.1*****

நன்றி வாழ்த்துக்கள்...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education






Arputham Hospital



Thoothukudi Business Directory