» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அனைத்து கடைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்: வியாபாரிகளிடம் எஸ்.பி., அறிவுறுத்தல்

வியாழன் 28, ஆகஸ்ட் 2025 7:58:30 PM (IST)



தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான் தலைமையில் அனைத்து வியாபாரிகள் சங்க  நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான்  தலைமையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்ட கலந்தாய்வுக் கூட்டத்தில் காவல்துறையினருக்கும் வியாபாரிகளுக்கும் நல்லுறவை ஏற்படுத்தி பொது மக்களுக்கு பயன்படும் வகையில் வியாபாரிகளின் நிறை குறைகளை   மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  கேட்டறிந்தார்.

மேலும்  சிசிடிவி கேமராவை அனைத்து கடைகளிலும் முக்கிய இடங்களிலும் அதிகம் நிறுவினால் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் குற்ற செயலில் ஈடுபவர்களை எளிதில் கண்டறிய உதவும் எனவும்  வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு  எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட  அலுவலக தலைமை கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  ஆறுமுகம்  வியாபாரிகள் சங்கத்  தலைவர்களும், பொறுப்பாளர்களும் மற்றும் உறுப்பினர்களும் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital




CSC Computer Education




Thoothukudi Business Directory