» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மகளிர் சுய உதவி குழு தலைவியை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி: மருமகன் கைது!!
புதன் 19, மார்ச் 2025 10:57:19 AM (IST)
தூத்துக்குடியில் மகளிர் சுய உதவி குழு தலைவியை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றதாக அவரது மருமகனை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி லூர்தம்மாள் புரத்தைச் சேர்ந்தவர் பீட்டர் மனைவி பிரமிளா (54), அந்த பகுதியில் மகளிர் சுய உதவி குழு தலைவியாக உள்ளார். இவரது தங்கையின் மகள் கணவரான லூர்தம்மாள் புரத்தை சேர்ந்த தனபாலன் மகன் அண்டன் (26) என்பவர் மகளிர் சுய உதவி குழு மூலம் ரூ.1லட்சத்து 20 ஆயிரம் கடன் வாங்கினாராம்.
ஆனால் அந்த கடனை திருப்பி செலுத்தவில்லையாம். இதனால் பிரமிளா போன் மூலம் அண்டனிடம் பணத்தை கட்டுமாறு கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அடைந்த அண்டன் பிரமிளா வீட்டுக்கு சென்று அவரிடம் தகராறு செய்து அவரை கையால் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்தாராம்.
அப்போது வீட்டில் இருந்தவர்கள் பார்த்து சத்தம் போடவே அங்கிருந்து அண்டன் ஓடிவிட்டாராம். இதில் காயம் அடைந்த பிரமிளா தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து புகாரின் பேரில் தாளமுத்து நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயந்தி கொலை முயற்சி வழக்குப் பதிந்து, அண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மாற்றம் : புதிய ஆணையராக பிரியங்கா மாற்றம்
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 8:34:13 PM (IST)

அனைத்து கடைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்: வியாபாரிகளிடம் எஸ்.பி., அறிவுறுத்தல்
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 7:58:30 PM (IST)

டிரம்ப் வரி விதிப்பு எதிரொலி: 50 சதவீதம் கடல் உணவு உற்பத்தி நிறுத்தம்!
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 5:06:40 PM (IST)

வாஷிங் மிஷினில் பதுங்கியிருந்த சாரை பாம்பு மீட்பு
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 4:41:11 PM (IST)

ஷிப்பிங் நிறுவன ஊழியர் மரணம்: துறைமுகத்தில் உறவினர்கள் முற்றுகைப் போராட்டம்!
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 4:26:07 PM (IST)

தூத்துக்குடி அருகே செப்டிக் டேங்கில் தவறி விழுந்த நாய், 4 குட்டிகள் மீட்பு!
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 4:05:29 PM (IST)
