» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா
புதன் 19, மார்ச் 2025 10:33:26 AM (IST)

கோவில்பட்டியில் வழக்கறிஞர் சங்கத்தின் புதிய கட்டிடத்தினை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி வசந்தி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா மற்றும் கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்தும் புத்தகக்கண்காட்சி நடைபெற்றது. இந்த நிகழச்சிக்கு கோவில்பட்டி வழக்கறிஞர் சங்க தலைவர் சங்கர் கணேஷ் தலைமை வகித்தார்.
கோவில்பட்டி வழக்கறிஞர் சங்க செயலாளர் ஜெயசீலன், துணைத்தலைவர் சிவன்பாண்டி, பொருளாளர் ரேவதி, துணைச் செயலாளர் முனீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய கட்டிடத்தினை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி வசந்தி திறந்து வைத்து, புத்தகக் கண்காட்சியையும் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் சார்பு நீதிமன்ற நீதிபதி மாரிக்காளை, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கருப்பசாமி, விரைவு நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன், குற்றவியல் நடுவர் எண் : 1 - நீதிமன்ற நீதிபதி கடற்கரை செல்வம், குற்றவியல நடுவர் எண் : 2- நீதிமன்ற நீதிபதி பீட்டர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அரசு வழக்கறிஞர் சம்பத்குமார், மூத்த வழக்கறிஞர்கள், சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக மீனவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி!!
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 12:54:37 PM (IST)

முதல்வர் ஸ்டாலினை 2வது முறையாக அரியனையில் அமர வைக்க வேண்டும்: அமைச்சர் பேச்சு!
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 12:46:08 PM (IST)

தூத்துக்குடியில் ஆபத்தான நிலையில் வடிகால் : மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 12:12:10 PM (IST)

முதல்வரின் நீட்டிக்கப்பட்ட காலை உணவு திட்டம் : மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 11:24:12 AM (IST)

தூத்துக்குடியில் 13 ரவுடிகள் கைது: 1 கிலோ கஞ்சா பறிமுதல்!
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 11:18:56 AM (IST)

தூத்துக்குடி நகைக் கடையில் 37 பவுன் திருட்டு : மும்பை தப்ப முயன்ற வாலிபர் சேலத்தில் கைது!
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 10:53:28 AM (IST)

GM SANKAR GANESHMar 21, 2025 - 03:02:14 PM | Posted IP 162.1*****