» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கடலில் தவறி விழுந்து ஷிப்பிங் நிறுவன மேலாளர் சாவு : தூத்துக்குடியில் பரிதாபம்!
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 10:32:54 AM (IST)
தூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்து ஷிப்பிங் நிறுவன மேலாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி போல்டன்புரத்தைச் சேர்ந்தபர் ராஜையா மகன் சந்தானராஜ் (43), இவருக்கு திலகராணி (30) என்ற மனைவியும், 5 வயதில் மகனும், 3 வயதில் மகளும் உள்ளனர். இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஷிப்பிங் கம்பெனியின் மரைன் இன்ஜினியரிங் பிரிவில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு 7 மணியளவில் பழைய துறைமுகத்தில் நடந்து வரும் பணிகளை பார்வையிட்டுவதற்காக சென்றுள்ளார்.
அப்போது துறைமுகத்தில் நிறுத்தி இருந்த கோமாங்கோ படகில் இருந்து அருகில் நின்றுகொண்டிருந்த புளூஹா கப்பலுக்கு தாவிச் செல்ல முயன்றபோது நிலை தடுமாறி கடலில் விழுந்தார். இதுகுறித்து தகவல்அறிந்து துறைமுக தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று அவரை மீட்டு முதல் உதவி அளித்து பின்னர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து தருவைக்குளம் கடல் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப் பதிவு செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 7:49:57 PM (IST)

முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் விருப்ப மனு
புதன் 17, டிசம்பர் 2025 7:42:57 PM (IST)











BarathAug 26, 2025 - 04:18:43 PM | Posted IP 172.7*****