» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 13 ரவுடிகள் கைது: 1 கிலோ கஞ்சா, ஆயுதங்கள் பறிமுதல்!
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 11:18:56 AM (IST)

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் திரிந்த 13 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் 1கிலோ கஞ்சா, 4 அரிவாள்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் படி, நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் சி. மதன் மேற்பார்வையில் நேற்று இரவு தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 8 சோதனை சாவடிகள் அமைத்தும், 3 காவல் ஆய்வாளர்கள் தலைமையில், ஒரு சார்பு ஆய்வாளர் மற்றும் 4 காவலர்கள் (ஆயுதப்படை காவலர்கள்) கொண்ட 8 சிறப்பு குழு அமைத்தும், மொத்தம் 91 காவல் துறையினர் தீவிர வாகன சோதனை, ரோந்து மற்றும் தொடர் குற்றங்களில் ஈடுபட்டுவரும் நபர்களை தணிக்கை செய்தும் Operation மாற்றப்பாதை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மேற்கண்டவாறு நடைபெற்ற Operation-ல் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தொடர் குற்றங்களில் ஈடுபட்டுவரும் சுமார் 32 நபர்களை தணிக்கை செய்தும், மேலும் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 7 நபர்கள் மற்றும் அரிவாளுடன் சுற்றித்திரிந்த 6 பேர் என மொத்தம் 13 நபர்களை நேற்று இரவு ஒரே நாளில் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து, அவர்களிடமிருந்த 1.100 கிலோ கிராம் கஞ்சா, 4 அரிவாள்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் வாகன தணிக்கையில், வாகனத்திற்கான உரிய ஆவணம் மற்றும் நம்பர் பிளேட் இல்லாத 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குகள் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள், ரவுடித்தனம் செய்பவர்கள், அரிவாள், வாள் போன்ற ஆயுதங்களுடன் சுற்றி திரிபவர்கள், கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவர்கள் யாராக இருந்தாலும் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபட்டு பொதுமக்களுக்கு தொல்லை மற்றும் அச்சுறுத்தல் ஏற்படுத்தினால் மாவட்ட காவல் அலுவலக எண் 0461 2340700, 9498101830 மற்றும் ஹலோ போலீஸ் எண் 95141 44100 ஆகியவற்றிற்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்றும், தகவல் தெரிவிப்பவர்கள் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 7:49:57 PM (IST)

முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் விருப்ப மனு
புதன் 17, டிசம்பர் 2025 7:42:57 PM (IST)










