» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி நகைக் கடையில் 37 பவுன் திருட்டு : மும்பை தப்ப முயன்ற வாலிபர் சேலத்தில் கைது!

செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 10:53:28 AM (IST)



தூத்துக்குடி நகைக்கடையில் 37 பவுன் தங்கக் கட்டிகளை திருடிய வாலிபரை சேலம் ரயில்வே போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி, டபிள்யூசிசி சாலையைச் சேர்ந்தவர் விகாஸ் சண்டி. இவர் அதே பகுதியில் தங்க நகைகள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இந்தக் கடையில் பணியாற்றி வந்த மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த விட்டல் சிங்கேடு, கடையில் இருந்து 37 பவுன் (298.400 கிராம்) தங்க கட்டியைத் திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதுகுறித்து கடையின் உரிமையாளர் விகாஸ் சண்டேல் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நகை திருட்டில் ஈடுபட்ட விட்டல் சண்டே, நேற்று திருநெல்வேலியில் இருந்து மும்பை செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் தப்பிச் செல்வதாக தூத்துக்குடி மத்திய போலீசார் சேலம் ரயில்வே காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

அதன்பேரில் நேற்று இரவு 9:30 மணிக்கு சேலம் ரயில் நிலையம் வந்த தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சேலம் ரயில்வே காவல்துறையினர் சோதனை நடத்தினர். அதில் பயணித்த விட்டல் சண்டேவை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து 37 பவுன் நகை, ரூ. 43,330 பணத்தை பறிமுதல் செய்து அவரை தூத்துக்குடி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் நேற்றிரவு சேலம் ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education

Arputham Hospital






Thoothukudi Business Directory