» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கல்
திங்கள் 1, ஜூலை 2024 5:17:25 PM (IST)

தூத்துக்குடியில் மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு சீருடை, கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
தூத்துக்குடியில் மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை சார்பில் "சரித்திரம் படை 24" என்ற பெற்றோரை இழந்த மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு எழுது ஏடு மற்றும் சீருடை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் இயக்குனர் ஜாய்சன் தலைமை தாங்கினார்.
புனித சவேரியார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அமல்ராஜ் வாழ்த்துரை வழங்கினார். தூத்துக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் பொன்னரசு தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரஜினி ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றி மாணவர்களை ஊக்கப்படுத்தினார். இந்நிகழ்வில் 19 பள்ளிகளைச் சார்ந்த 210 மாணவர்களுக்கு எழுது ஏடு மற்றும் சீருடை வழங்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரி சார்பில் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சனி 8, மார்ச் 2025 5:22:04 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் அறிவியல் மன்றவிழா : மாணவர்கள் அசத்தல்!
சனி 8, மார்ச் 2025 4:43:30 PM (IST)

தூத்துக்குடி திருச்சிலுவை ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா
ஞாயிறு 2, மார்ச் 2025 11:44:25 AM (IST)

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
வெள்ளி 21, பிப்ரவரி 2025 3:18:31 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம்!
வியாழன் 20, பிப்ரவரி 2025 5:51:03 PM (IST)

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: அழகர் பப்ளிக் பள்ளி அணி வெற்றி
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:08:36 PM (IST)
