» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
செய்துங்கநல்லூர் எம்.எம்.நடுநிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
திங்கள் 27, ஜனவரி 2025 11:47:48 AM (IST)

செய்துங்கநல்லூர் எம்.எம்.நடுநிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது.
இந்த விழாவை முன்னிட்டு முன்னாள் மாணவர்கள் கூடினர். அவர்கள் தங்களுக்கு கல்வி பயின்று கொடுத்து ஒய்வு பெற்ற ஆசிரியர்களை அழைத்து கௌரவப்படுத்தினர்.அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியை ஸ்ரீலதா தலைமை வகித்தார். முன்னாள் தலைமை ஆசிரியர் சண்முக பெருமாள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
முன்னாள் ஆசிரியர்கள் அழகர், லெட்சுமணராஜ், வீரசுப்பிரமணியன், இன்னாள் ஆசிரியர் பூர்ணலதா, பிலிப்ஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். மாணவர்கள் தாங்கள் படித்த அறைக்கு சென்று தங்கள் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சுப்பையா, மாயாண்டி, மாரியப்பன் உள்பட முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வுப் பேரணி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:24:51 PM (IST)

பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கோவில்பட்டி புத்தகத் திருவிழாவில் பாராட்டு!
சனி 23, மே 2026 3:05:55 PM (IST)

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்: ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 21, மே 2026 11:43:18 AM (IST)

பத்தாம் வகுப்பு தேர்வில் கோவில்பட்டி பள்ளி 100% தேர்ச்சி!
வியாழன் 21, மே 2026 11:02:36 AM (IST)

10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 7-இல் துவக்கம் : மே 26 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 21, மே 2026 8:46:56 AM (IST)

10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில்: தூத்துக்குடி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளி 100% தேர்ச்சி!
புதன் 20, மே 2026 7:57:09 PM (IST)

