» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

செய்துங்கநல்லூர் எம்.எம்.நடுநிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

திங்கள் 27, ஜனவரி 2025 11:47:48 AM (IST)



செய்துங்கநல்லூர் எம்.எம்.நடுநிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது. 

இந்த விழாவை முன்னிட்டு முன்னாள் மாணவர்கள் கூடினர். அவர்கள் தங்களுக்கு கல்வி பயின்று கொடுத்து ஒய்வு பெற்ற ஆசிரியர்களை அழைத்து கௌரவப்படுத்தினர்.அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியை ஸ்ரீலதா தலைமை வகித்தார். முன்னாள் தலைமை ஆசிரியர் சண்முக பெருமாள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். 

முன்னாள் ஆசிரியர்கள் அழகர், லெட்சுமணராஜ், வீரசுப்பிரமணியன், இன்னாள் ஆசிரியர் பூர்ணலதா, பிலிப்ஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். மாணவர்கள் தாங்கள் படித்த அறைக்கு சென்று தங்கள் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சுப்பையா, மாயாண்டி, மாரியப்பன் உள்பட முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory