» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்
வியாழன் 30, ஜனவரி 2025 10:02:58 AM (IST)

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஜ பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
கல்லூரியின் தாளாளர் வழக்கறிஞர் ரவீந்திரன் சார்லஸ் தலைமை தாங்கினார். முதல்வர் கோயில்ராஜ் ஞான தாசன் வரவேற்புரை நிகழ்த்தினார். எந்திரவியல் துறைத்தலைவர் பிரபாகர் வேதசிரோன்மணி ஆரம்ப ஜெபம் செய்தார். கல்லூரியின் வேலை வாய்ப்பு அலுவலர் மற்றும் ஆட்டோமொபைல் துறை தலைவர் ஜான் வெஸ்லி கம்பெனியை பற்றிய விளக்க உரையை வழங்கினார்.
கல்லூரியின் இந்த முகாமில் சென்னை மண்டோ ஆனந்த் கம்பெனியின் மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் நரேந்திர குமார், கோவிந்தராஜ், டெனுஷா ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் நிறுவனம் பற்றி மாணவர்களுக்கு சிறப்புரை நிகழ்த்தினார். இந்த முகாமில் தேர்வான 26 மாணவர்கள் மற்றும் 8 மாணவியர் வேலை வாய்ப்பு ஆணைகளைப் பெற்றனர். முடிவில் கல்லூரி பர்சர் தனபால் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் தலைமையில் முதல்வர் மற்றும் வேலை வாய்ப்பு அலுவலர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)

நாட்டார்குளம் பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் தொடர் பயிற்சி வகுப்பு பயிலரங்கம்
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:50:43 PM (IST)

குழந்தைகள் அறிவியல் மாநாடு: ஆட்சியர் துவக்கி வைத்தார்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:48:06 PM (IST)


