» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மாப்பிள்ளையூரணி பள்ளியில் பொம்மலாட்டம் மூலமாக நல் ஒழுக்கம் விழிப்புணா்வு நிகழ்ச்சி!

வெள்ளி 28, ஜூன் 2024 5:54:54 PM (IST)



மாப்பிள்ளையூரணி பள்ளியில் பொம்மலாட்டம் மூலமாக நல் ஒழுக்கம் பற்றிய விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்திற்குட்பட்ட காமராஜா் நகா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காமராஜா் நற்பணி மன்றம் சாா்பில் மாணவ மாணவிகளுக்கு நல் ஒழுக்கம் பற்றிய விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் பொம்மலாட்டம் மூலமாக கதை சொல்லும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ஆசிாியா் சுமதி தலைமை வகித்தார். 

தூத்துக்குடி ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஸ் பாலன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அனைவருக்கும் நினைவு பாிசு வழங்கினாா். தூத்துக்குடி காதை களம் மற்றும் கழுதை புத்தக வாசிப்பு குழுவின் சாா்பில் சக்திவேல் மற்றும் அன்பு சைமன் ஆகியோா் கலந்து கொண்டு பொம்மலாட்டம் மூலமாக மாணவ மாணவிகளுக்கு கதை சொல்லி மகிவித்தனா். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை காமராஜா் நற்பணி மன்றத்தினா் செய்திருந்தனா்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory