» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் பரிசளிப்பு விழா

வெள்ளி 28, ஜூன் 2024 5:20:27 PM (IST)



நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச போதை ஒழிப்பு நாள் விழிப்புணர்வு ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. 

மாணவர்கள் கூடுகையின் போது நடைபெற்ற விழாவிற்கு தலைமை ஆசிரியர் குணசீலராஜ் தலைமை வகித்து பரிசுகளை மாணவர்களுக்கு வழங்கினார். 6, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கு ஒவ்வொரு வகுப்புக்கும் தனித்தனி பிரிவாக பரிசுகள் வழங்கப்பட்டன. ஓவியக்கலை ஆசிரியர் அலெக்ஸன் கிறிஸ்டோபர் முன்னிலை வகித்தார். 

ஆறாம் வகுப்பு பிரிவில் நாகராஜன் முதலிடத்தையும், மாரிமுத்து இரண்டாமிடத்தையும், ஜோசன் மேஷாக் மூன்றாமிடத்தையும், டேனியல் ராஜ் ஆறுதல் பரிசையும் பெற்றனர். ஏழாம் வகுப்பு பிரிவில் இம்மானுவேல் அன்புராஜ் முதலிடத்தையும், கோபு இரண்டாமிடத்தையும், கால்ரித் மூன்றாமிடத்தையும், இசக்கி ராஜா ஆறுதல் பரிசையும் பெற்றனர். 

எட்டாம் வகுப்பு பிரிவில் துரைசிங் முதலிடத்தையும், மதன் கமலேஷ் இரண்டாமிடத்தையும், சுப்பிரமணி மூன்றாமிடத்தையும், கார்த்தி கிருஷ்ணன் ஆறுதல் பரிசினையும் பெற்றுக் கொண்டனர். பரிசளிப்பு விழாவில் உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர், உடற்கல்வி ஆசிரியர் தனபால், என்சிசி அலுவலர் சுஜித் செல்வர்சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

பரிசளிப்பு விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் மற்றும் பிற ஆசிரியர்கள் செய்திருந்தனர். பரிசுகளைப் பெற்றுக் கொண்ட மாணவர்களை பள்ளியின் தாளாளர் சுதாகர், பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory