» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

புதன் 26, ஜூன் 2024 10:23:38 AM (IST)



தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளி சார்பில்  போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.

தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணியை பள்ளியின் தாளாளரும், சாரண, சாரணிய இயக்கத்தின் மாநில துணை ஆணையரும் மற்றும் மாவட்ட பயிற்சி ஆணையருமான ஆ.ஜெயாசண்முகம் தொடங்கி வைத்தார். மேலும், போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி மாணவ, மாணவிகளால் எடுக்கப்பட்டது. 

மாணவ, மாணவிகள் போதை ஒழிப்பு பற்றிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாசகங்களை கூறிக்கொண்டு காமராஜ்நகர், 3-ம் மைல், ஆசிரியர்காலனி, சங்கர்காலனி வழியாக பள்ளியை வந்தடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் சாரண, சாரணிய பயிற்சியாளர்கள் உதயம்மாள், மணிமேகலை, பொன்னரசி மற்றும் ஆசிரியைகள் செய்திருந்தனர். பேரணியில் கலந்து கொண்ட அனைவருக்கும் துணை முதல்வர் ரா.ச.பிரியங்கா நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஸ்பிக் நகர் பள்ளியில் பெற்றோர் தினவிழா!

திங்கள் 2, செப்டம்பர் 2024 3:16:46 PM (IST)


Sponsored Ads





Thoothukudi Business Directory