» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கல்

செவ்வாய் 25, ஜூன் 2024 11:42:40 AM (IST)



நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் இந்த கல்வியாண்டிற்கான தமிழக அரசின் விலையில்லா பாடப் புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து புதிதாக 6ம் வகுப்பு, 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கும், ஏற்கனவே பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வகுப்பு வாரியாக பாட புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தலைமை ஆசிரியர் குணசீலராஜ் தலைமை வகித்து மாணவர்களுக்கு பாட புத்தகங்களை வழங்கினார். 

இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ், பாட புத்தகங்களின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். பாட புத்தகங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும், அன்றன்று நடத்தக்கூடிய பாடங்களை நாள்தோறும் கற்க வேண்டும், இந்த கல்வியாண்டில் மாணவர்கள் நன்கு கல்வி கற்று அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டன. 

இதில் உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர், என்சிசி அலுவலர் சுஜித் செல்வசுந்தர் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் சுதாகர், ஆசிரியர் அலெக்ஸன் கிறிஸ்டோபர், உடற்கல்வி ஆசிரியர் தனபால் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory