» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் உலக சுற்றுச் சூழல் தின விழா!
வியாழன் 6, ஜூன் 2024 5:14:01 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைபபள்ளியில்உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு தலைமை யாசிரியர் கென்னடி வேதராஜ் தலைமை தாங்கினார். உதவி தலைமையாசிரியர் சார்லஸ் திரவியம் முன்னிலை வகித்தார். இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் உலக சுற்றுச்சூழல் தினம் குறித்து விளக்கி கூறினார். சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம், வன விலங்குகளின் பாதுகாப்பின் அவசியம், சுற்றுச்சூழலின் சமச்சீர் நிலை, மரங்களை வளர்த்தல், புவி வெப்பமயமாவதை தடுத்தல் மற்றும் மியாவாக்கி காடுகளை உருவாக்குதல் ஆகியவற்றை குறித்து எடுத்துரைத்தார்.
மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியின் தேசிய மாணவர் படை சார்பில் வழங்கப்பட்ட மருத்துவ குணம் வாய்ந்த மரக்கன்றினை, தலைமையாசிரியர் கென்னடி வேதராஜ் பள்ளி வளாகத்தில் நட்டு வைத்தார். தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வசுந்தர், அலுவலகப் பணியாளர்கள் ஜெபஸ்டின், அப்பல்லோ, ராஜ குமார், காளிராஜ் மற்றும் ஜோசப் ஆகியோர் கலந்து கொண்டனர். அறிவியல் ஆசிரியர் ஜென்னிங்ஸ், காமராஜ் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியில் மாணவர் பேரவை நிறைவு விழா!
வெள்ளி 9, மே 2025 4:46:16 PM (IST)

பிளஸ் 2 பொதுத்தேர்வு: கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்றவர்களின் விவரம்!
வெள்ளி 9, மே 2025 11:06:15 AM (IST)

நாகலாபுரம் பள்ளியில் ஆங்கிலப் பயிற்சி முகாம்!
வியாழன் 8, மே 2025 8:07:28 AM (IST)

நாசரேத் ஆர்ட் தொழிற்பள்ளி முன்னாள் மாணவர் சங்க ஆண்டு விழா
வெள்ளி 2, மே 2025 8:29:57 PM (IST)

சுகாதார உதவியாளர் சான்றிதழ் வழங்கும் விழா
வியாழன் 1, மே 2025 7:51:10 PM (IST)

என்.எம்.எம்.எஸ். தகுதித் தேர்வு: புனித அன்னாள் பள்ளி மாணவர்கள் சாதனை!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 10:16:44 AM (IST)
