» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் உலக சுற்றுச் சூழல் தின விழா!

வியாழன் 6, ஜூன் 2024 5:14:01 PM (IST)



நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைபபள்ளியில்உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்பட்டது. 
                  
இந்நிகழ்விற்கு  தலைமை யாசிரியர் கென்னடி வேதராஜ் தலைமை தாங்கினார். உதவி தலைமையாசிரியர் சார்லஸ் திரவியம் முன்னிலை வகித்தார். இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் உலக சுற்றுச்சூழல் தினம் குறித்து விளக்கி கூறினார். சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம், வன விலங்குகளின் பாதுகாப்பின் அவசியம், சுற்றுச்சூழலின் சமச்சீர் நிலை, மரங்களை வளர்த்தல், புவி வெப்பமயமாவதை தடுத்தல்  மற்றும் மியாவாக்கி காடுகளை உருவாக்குதல் ஆகியவற்றை குறித்து எடுத்துரைத்தார். 

மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியின் தேசிய மாணவர் படை சார்பில் வழங்கப்பட்ட மருத்துவ குணம் வாய்ந்த மரக்கன்றினை, தலைமையாசிரியர் கென்னடி வேதராஜ் பள்ளி வளாகத்தில் நட்டு வைத்தார்.  தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வசுந்தர், அலுவலகப் பணியாளர்கள் ஜெபஸ்டின், அப்பல்லோ, ராஜ குமார், காளிராஜ் மற்றும் ஜோசப் ஆகியோர் கலந்து கொண்டனர். அறிவியல் ஆசிரியர் ஜென்னிங்ஸ், காமராஜ் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஸ்பிக் நகர் பள்ளியில் பெற்றோர் தினவிழா!

திங்கள் 2, செப்டம்பர் 2024 3:16:46 PM (IST)


Sponsored Ads





Thoothukudi Business Directory