» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரியில் ஆண்டு விழா

செவ்வாய் 14, மே 2024 9:06:30 PM (IST)



நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரியில் 25 வது ஆண்டு விழா நடந்தது. 

தூய யோவான் பேராலய தலைமைகுரு ஹென்றி ஜீவானந்தம் தலைமை வகித்து ஜெபித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கல்லூரி தாளாளர் செல்வின் வரவேற்றார். கல்லூரி இயக்குனர் பேரா.ஜெயச்சந்திரன் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். ஒய்வு பெற்ற குருவானவர் ஜெரேமியா, முன்னாள் கல்லூரி தாளாளர் ஜேஸ்மின் ராபர்ட்சன், ஒய்வு பெற்ற ஆசிரியை விஜேந்திரா தியோடர், கோவை தொழிலதிபர் தனுஷ்கரன் ஆகியோர் வாழ்த்திப்பேசினர். 

மாணவிகளின் நடனம், நாடகம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சி கள் இடம் பெற்றன. நிகழ்ச்சியை கல்லூரி அலுவலர் சுந்தரி தொகுத்து வழங்கினார். இதில் மூக்குப்பீறி தூய மாற்கு ஆலய பரிபாலன கமிட்டி தலைவர் சாமுவேல், நாசரேத் தூய யோவான் பேராலய சபை ஊழியர்கள் ஜெசு, ஜெபராஜ் சாமுவேல், கல்லூரி ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.ஆசிரியை கிறிஸ்டினா ஜாண்சன் நன்றி கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory